'இறுகிய சளியை போக்க இந்தக் கீரை; நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி ஒரு ஸ்பூன்...' மருத்துவர் சிவராமன் அட்வைஸ்

நீண்ட நாள் சளியை இலக்கி வெளியேற்ற உதவும் ஒரு மூலிகை தாவரத்தை பற்றியும் அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

நீண்ட நாள் சளியை இலக்கி வெளியேற்ற உதவும் ஒரு மூலிகை தாவரத்தை பற்றியும் அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
கரிசலாங்கண்ணி

தேரன் குடிநீர் என்ற பழைமையான நூலில், கரிசலாங்கண்ணியின் மகத்துவம் ஒரு பாடல் மூலம் விளக்கப்பட்டுள்ளது என்றும் அந்த பாட்டில் கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள் மற்றும் பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டுள்ளதாக டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

Advertisment

"தேகரா சச்சுரதம் தில்லிய நேர்நேர் கூட்டி பாகபுற காய்ச்சி பருகுவார் காகமுனும் சளி தீரும் காணே" என்ற பாடல், எள் எண்ணெயையும் கரிசலாங்கண்ணி சாறையும் கலந்து காய்ச்சி, அந்த தைலத்தை ஒரு ஸ்பூன் அருந்தினால், அடர்த்தியான சளி வெளியேறி, காக்கைகூட தூக்கிச் செல்லும் அளவுக்கு கெட்டியாக இருக்கும் என்று கூறுகிறது. இது நிமோனியா, பிராங்கைடிஸ், நாள்பட்ட பிராங்கைடிஸ் அல்லது புகைப்பவர்களின் இருமல் போன்ற கடுமையான சுவாசப் பிரச்சனைகளுக்கு கரிசலாங்கண்ணி ஒரு சிறந்த தீர்வாக அமையும் என்பதைக் குறிக்கிறது.

கரிசலாங்கண்ணி, நுரையீரலைச் சீர்படுத்தும் ஒரு முக்கிய கீரை வகையாகும். கல்லீரலுக்கு கரிசலாங்கண்ணியின் சிறப்புகள் குறித்து எண்ணற்ற நூல்கள் போற்றுகின்றன. அக்காலத்தில் மக்கள் இதைத் தேநீராக அருந்தி வந்துள்ளனர். ஆனால், இன்று நெல் வயல்களில் ஒரு களைச் செடியாகக் கருதப்பட்டு, களைக்கொல்லிகள் (கிளைபோசேட்) மூலம் அழிக்கப்படுகிறது. இது மிகுந்த வேதனைக்குரிய செயல். ஏனென்றால், கிளைபோசேட் போன்ற களைக்கொல்லிகள் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை.

சளியை இலக்கி வெளியேற்ற கரிசலாங்கண்ணியை பயன்படுத்தும் முறை: வெள்ளை கரிசலாங்கண்ணியை எடுத்து காலை வேளையில் தேநீராக்கி அருந்தினால், காலை நேர கபம், இருமல், வீசிங், தும்மல் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். 

Advertisment
Advertisements

நல்லெண்ணையையும் கரிசலாங்கண்ணி சாறையும் கலந்து காய்ச்சி, அந்த தைலத்தை ஒரு ஸ்பூன் அருந்தினால், அடர்த்தியான சளி வெளியேறும்.

மேலும், இது கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம், கர்நாடக ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து கரிசலாங்கண்ணி கோவிட் சிகிச்சைக்கு உதவும் என்று கண்டறிந்துள்ளது. 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Home remedies to relieve from cold and fever Home remedies to cure cold and cough

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: