/indian-express-tamil/media/media_files/2025/06/17/I36vEbhIf3s0Jg5bU3Mw.jpg)
தலை முதல் கால் வரை ஏற்படக் கூடிய பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக அமையக் கூடிய ஆற்றல் எலுமிச்சை சாறில் இருக்கிறது என்று மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். ஏனெனில், இதில் வைட்டமின் சி, பி மற்றும் பொட்டாஷியம் ஆகியவை இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இது குறித்த விவரங்களை புதுயுகம் டி.வி யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று சத்துகளும் ஒன்றாக இணைந்து இருப்பதனால், உடலில் இருக்கும் அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தும் தன்மை எலுமிச்சை சாறில் இருக்கிறது என்று மருத்துவர் உஷா நந்தினி குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, பொட்டாஷியம் சத்து இதில் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும். இது தசை வலி போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. எனவே, இது போன்ற வலிகள் இருப்பவர்கள் எலுமிச்சை சாறு பருகலாம் என்று மருத்துவர் உஷா நந்தினி பரிந்துரைக்கிறார்.
இது தவிர இருதயம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பொட்டாஷியம் அளவு குறைவாக இருக்கும். எனவே, இருதய கோளாறுகளை தடுக்கும் ஆற்றலும் எலுமிச்சை சாறுக்கு உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இதேபோல், எலுமிச்சை சாறில் இருக்கக் கூடிய வைட்டமின் சி, நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த உதவி செய்கிறது. இதன் மூலம் சாதாரணை சளி மற்றும் காய்ச்சலில் தொடங்கி பல்வேறு வகையான தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும்.
அந்த வகையில், எலுமிச்சை சாறை சரியான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை சீரான முறையில் மேம்படுத்த முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.