/indian-express-tamil/media/media_files/2025/05/16/NOeZw1yrr7qnaSlYH5ui.jpg)
நம்முடைய உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. எனினும், உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களினால் சிறுநீரக கல் பாதிப்பு தற்போது நிறைய பேருக்கு இருக்கிறது. இது தொடர்பான ஒரு வதந்தியும் இப்போது பரவி வருகிறது.
சமீப காலமாக பீர் குடித்தால் சிறுநீரகத்தில் இருக்கும் கல் கரையும் என்று சிலர் கூறுவதாக மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து முற்றிலும் தவறானது என்று அவர் கூறுகிறார். இது தொடர்பான தகவல்களை தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், பீரில் ஏற்கனவே யூரிக் அமிலம் அதிகப்படியாக கலந்து இருக்கிறது. மேலும், யூரியா, ஆக்ஸலேட் போன்றவையும் பீரில் அதிகமாக இருக்கிறது. இது போன்ற விஷயங்கள் நிறைந்த பீர் குடித்தால், சிறுநீரகத்தில் இருக்கும் கல் மேலும் வளர்ச்சி அடையும் என்று மருத்துவர் யோக வித்யா எச்சரிக்கை விடுக்கிறார்.
இதனால், இயற்கையான வேறு சில பானங்களை குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தின் கல்லை கரைக்க முடியும் என்று அவர் அறிவுறுத்துகிறார். இதற்காக, வாழைத்தண்டு சாறு, முள்ளங்கி சாறு, நீர்முள்ளி கசாயம், வெண்பூசணி சாறு மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றை பருகலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
இது தவிர ஒரு நாளைக்கு சுமார் 4 லிட்டர் வரை தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்தில் இருக்கும் கல் கரையும் என்று அவர் பரிந்துரைக்கிறார். இதனடிப்படையில், பீர் போன்ற மதுபானங்களை பருகும் போது அவை வேறு விதமான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.