/indian-express-tamil/media/media_files/2025/04/08/OEa3XF2rx7gsPkQ1nuEs.jpg)
விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து ஆண்களிடத்திலும் இருக்கும். ஆனால், இதற்காக இயற்கையான வழி என்னவென்று தெரியாத குழப்பத்தில் பலர் உள்ளனர்.
அந்த வகையில், இயற்கையான முறையில் உணவு முறைகள் மூலமாக விந்தணுக்களை அதிகப்படுத்தும் முறை குறித்து மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை தனது யூடியூப் சேனலில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில், முருங்கை பூவை பாலில் காய்ச்சி, அதில் இரண்டு சிட்டிகை ஜாதிக்காய் தூள் சேர்த்து, தொடர்ந்து இரவு 48 நாட்கள் குடிக்க வேண்டும். முருங்கை பூ, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
ஆலமரத்தின் பழம், விழுது மற்றும் கொழுந்து இலைகளை சம விகிதத்தில் (1:1:1) எடுத்து, பாலில் கலந்து குடிக்கலாம். இல்லையென்றால் இவற்றை காயவைத்து பொடியாக்கி தேனில் கலந்து 48 நாட்கள் காலை மற்றும் இரவு என இரண்டு வேளையும் சாப்பிடலாம். இது விந்தணுக்களின் எண்ணிக்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
சிலாசத்து பர்பத்தை, ஒரு ஆளின் எடை மற்றும் பலத்தைப் பொறுத்து, 1 கிராம் முதல் 3 கிராம் வரை தினமும் வேகவைத்த முட்டையில் வைத்து காலையில் சாப்பிட வேண்டும். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இவற்றை தொடர்ச்சியாக பின்பற்றி விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.