அரிசி மாவு சாப்பிட்டு சலித்து வீட்டதா புதிதாக செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி ஒரு தோசை செய்வது என்று பார்ப்போம். அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது மோர் தோசை எப்படி செய்வது என்று கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
அரிசி - 250 கிராம் (பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி) கெட்டி அவல் - 75 கிராம் மோர் - 600 மில்லி வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் இஞ்சி கொத்தமல்லி நெய் கடலை எண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
அரிசி மற்றும் அவலை சுமார் 4 மணி நேரம் மோர் அல்லது பட்டர் மில்க்கில் ஊற வைக்கவும். ஊறிய பின், அதே மோருடன் சேர்த்து மாவை விழுதாக அரைக்கவும். மாவு வெள்ளை பெயிண்ட் அடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
அரைத்த மாவை 6 முதல் 8 மணி நேரம் அறை வெப்பநிலையில் புளிக்க விடவும். (நீங்கள் பயன்படுத்தும் மோரில் ஏற்கனவே உப்பு இருந்தால் தனியாக உப்பு சேர்க்கத் தேவையில்லை. இல்லையெனில், உப்பு சேர்த்துக்கொள்ளவும்).
புளித்த மாவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவு ஊற்றும் பதத்திற்கு, சற்று நீர்க்க இருக்க வேண்டும். தோசைக்கல்லை சூடாக்கி, சிறிது எண்ணெய் தடவி, வெங்காயத்தால் துடைத்து சீசன் செய்யவும்.
ஒரு கரண்டி மாவை தோசைக்கல்லில் ஊற்றி, மெதுவாகப் பரப்பவும். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் கொத்தமல்லியைத் தூவி, ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும். தோசையை மூடி வைத்து 2-3 நிமிடம் வேக விடவும். ஒருபுறம் மட்டும் வேக விடவும். வெந்ததும் தோசையை எடுத்து பரிமாறவும்.