வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய்... கண்ணுக்கு நல்ல குளிர்ச்சி: சொல்லும் டாக்டர் மைதிலி

தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து டாக்டர் மைதிலி ஆலோசனைகளை வழங்கியுளார்.

தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து டாக்டர் மைதிலி ஆலோசனைகளை வழங்கியுளார்.

author-image
WebDesk
New Update
dr mythili

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய், லோக்கமா, கண்புரை, கண் அழுத்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை குறைக்கும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.

தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து டாக்டர் மைதிலி ஆலோசனைகளை வழங்கியுளார். நெய் சாப்பிட்டால் கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும், வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய், லோக்கமா, கண்புரை, கண் அழுத்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை குறைக்கும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.

Advertisment

தினமும் 1 ஸ்பூன் நெய் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து டாக்டர் மைதிலி தனது யூடியூப் சேனலில் (Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian) அதை உங்களுக்கு தொகுத்து தருகிறோம்.

டாக்டர் மைதிலி கூறுகையில், “தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, 1 ஸ்பூன் நெய்யை சூடு பண்ணி, ஆற வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு 1 டம்பளர் வெந்நீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்பாக செயல்படும். ஞாபக மறதி நோய், அல்ஜிமைர், டிமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.  இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். 

அதே போல,  இதயமும் ஆரோக்கியமாக செயல்பட உதவி செய்யும். இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்காமல் சீராக வைக்கும். உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பின் அளவையும் சரியான அளவில் பராமரிக்கும். இதனால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். இதுமட்டுமல்ல உடலில் நோய் எதிர்ப்பு தன்மையையும் பல மடங்கு அதிகரிக்கும்.

Advertisment
Advertisements

மேலும், தினமும் 1 ஸ்பூன் நெய்யை சூடு பண்ணி, ஆற வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு 1 டம்பளர் வெந்நீர் குடித்து வந்தால் முடி கொட்டுவது நிற்கும் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

தினமும் 1 ஸ்பூன் நெய் சாப்பிடுவதால், கண்பார்வைக்கு நல்லது, கண் பார்வையைக் கூர்மையாக்கி கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய், லோக்கமா, கண்புரை, கண் அழுத்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை குறைக்கும் என்று ஆய்வுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ரத்த ஓட்டத்தை தூய்மைப்படுத்தும், சரியான அளவில் வைக்கும்.

நெய்யில் இருக்கக்கூடிய பியுடிரிக் அமிலம் (butyric acid), மீடியம் செயின் டிரைகிளிசெரைட்ஸ் (Medium-Chain Triglycerides MCT) என்ற  இரண்டு வேதிப்பொருளும் செரிமானத்தை சீராக வைக்கும், குடலில் இருக்கும் கழிவுகளை முழுவதுமாக வெளியேற்றம் செய்து, குடல் பகுதியை சீராக வைத்து, அஜீரண கோளாறு, அல்சர், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகளை கம்மி பண்ணும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். 


தினமும் 1 ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாக பிரகாசமாக இருக்கும். இளம் வயதிலேயே சரும சுறுக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். கருவளையம், மங்கு, போன்றவற்றுக்கு மேலே தடவலாம்.  எலும்பை வலுப்படுத்தும்.” என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.

அதே நேரத்தில், உடலில் கெட்ட கொழுப்பு அளவு 160-170 இருப்பவர்கள் இந்த நெய்யை சாப்பிடக் கூடாது. உடல் பருமன் இருப்பவர்கள் நெய் சாப்பிடக்கூடாது. குழந்தைகள் சிறுவயதில் உடல் பருமன் இருந்தால் நெய் சாப்பிடக் கூடாது என்று டாக்டர் மைதிலி அறிவுறுத்துகிறார்.  

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: