நுரையாக சிறுநீர்? கிட்னி பாதிப்பு அபாயம் இருக்கு... பார்லி கஞ்சி இப்படி குடிங்க!

சிறுநீர் கழிக்கும்போது நுரையாக போனால், கிட்னி பாதிப்பு அபாயம் இருக்கிறது அதனால், பார்லி கஞ்சியை இந்த முறையில் குடிங்க என்று சித்தா டாக்டர் நித்யா பரிந்துரை செய்துள்ளார்.

சிறுநீர் கழிக்கும்போது நுரையாக போனால், கிட்னி பாதிப்பு அபாயம் இருக்கிறது அதனால், பார்லி கஞ்சியை இந்த முறையில் குடிங்க என்று சித்தா டாக்டர் நித்யா பரிந்துரை செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
dr nithya barley

சிறுநீரகப் பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிய என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்பதை டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

மருத்துவர்கள் எல்லா நோய்களையும் அறிகுறிகளை வைத்து கண்டறிந்து அதற்கான மருந்துகளையும் சிகிச்சைகளையும் அளிக்கின்றனர். அந்த வகையில், சிறுநீர் கழிக்கும்போது நுரையாக போனால், கிட்னி பாதிப்பு அபாயம் இருக்கிறது அதனால், பார்லி கஞ்சியை இந்த முறையில் குடிங்க என்று சித்தா டாக்டர் நித்யா பரிந்துரை செய்துள்ளார். 

Advertisment

பலரும் சிறுநீரகப் பிரச்னை இருக்கிறது என்பது தெரியாமலே இருந்துவிட்டு பிறகு, நோய் அதிகமான பிறகு வருத்தப்படுவது உண்டு. அவர்களுக்கு சிறுநீரகப் பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிய என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்பதை டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

பொதுவாக காணப்படும் சிறுநீரக செயலிழப்பு நோய்க்கான அறிகுறிகள் என்றால், சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும், மாடிப்படி ஏறினால் மூச்சு வாங்கும், சிறுநீர் கழித்தால் அளவுக்கு அதிகமான நுரை ஏற்பட்டு அது கொஞ்சம் தாமதமாக மறையும். சிறுநீர் கழிக்கும்போது அதிக நுரை ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் சிறுநீரில் புரோட்டின் கசிவு இருப்பதும் சிறுநீரகப் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள் என்று டாக்டர் நித்யா கூறுகிறார். அடுத்து முக்கியமான அறிகுறிகள், உடல் எடை இழப்பு, கால்களில் வீக்கம், கை, கைவிரல்களில் வீக்கம், முகத்தில் சின்ன சின்னதாக பருக்கள் வருகிற மாதிரி இருக்கும், முதுகுப் பகுதியில் திடீரென வியர்க்குரு மாதிரி வரும் என்றாலும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று டாடக்டர் நித்யா எச்சரிக்கிறார். 

அதே போல, குறுகிய காலத்தில் ரத்த அழுத்தத்தின் அளவு 180 என்கிற அதிகரிக்கிறது என்றாலும் சிறுநீரகப் பிரச்னை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார்.

Advertisment
Advertisements

இந்த அறிகுறிகள் தெரிந்தால், சாதாரண பிரச்னை என்று நினைத்து விட்டுவிட வேண்டாம் சிறுநீரகப் பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று டாக்டர் நித்யா அறிவுறுத்துகிறார்.

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயமாக பார்லி கஞ்சி சாப்பிட வேண்டும் என்று டாக்டர் நித்யா பரிந்துரைக்கிறார். பார்லி அரிசியை வேக வைத்து, அந்த பார்லி கஞ்சியுடன், பார்லி வேகவைத்த தண்ணீரையும் குடிக்க வேண்டும் சிறுநீரக நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. 

உடல்நிலையைப் பாதுகாக்க அதிகம் எண்ணெய் பொருட்கள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார். 

ஒருவருக்கு சிறுநீரகப் பிரச்னை இருக்கிறது என்று தெரிந்தால் அதை சித்த மருத்துவத்தில் நிச்சயமாக குணப்படுத்த முடியும். உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா கூறுகிறார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: