ஒரு கொட்டைப் பாக்கை இரவில் தண்ணீரில் ஊற வைத்து... கொலஸ்ட்ரால், மலச் சிக்கலுக்கு சூப்பர் தீர்வு: டாக்டர் நித்யா

கொட்டைப் பாக்கை இரவில் தண்ணீரில் ஊற வைத்து குடித்தால், கொலஸ்ட்ரால், மலச் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என்று டாக்டர் நித்யா பரிந்துரைக்கிறார். கொட்டைப் பாக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
kottai paakku dr nithya

தாம்பூலத்தில் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு பொருள் கொட்டைப் பாக்கு. இந்த கொட்டைப் பாக்கிற்கு சித்த மருத்துவத்தில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கொட்டைப் பாக்கை மறந்துவிட வேண்டாம்.

கொட்டைப் பாக்கை இரவில் தண்ணீரில் ஊற வைத்து குடித்தால், கொலஸ்ட்ரால், மலச் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என்று டாக்டர் நித்யா பரிந்துரைக்கிறார். கொட்டைப் பாக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

Advertisment

கொட்டைப் பாக்கின் மருத்துவ குணம் குறித்து மிஸ்டர் லேடீஸ் யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா கூறுகையில், “பொதுவாக சாப்பிட்ட பிறகு வழக்கத்தில் இருந்த தாம்பூலம் தரிப்பது மறைந்து வருகிறது. அந்த தாம்பூலத்தில் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு பொருள் கொட்டைப் பாக்கு. இந்த கொட்டைப் பாக்கிற்கு சித்த மருத்துவத்தில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கொட்டைப் பாக்கை மறந்துவிட வேண்டாம். 

பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்களுக்கு தரப்படும் சித்த மருந்துகளில் ஒரு முக்கிய மூலிகையாக கொட்டைப் பாக்கு இருக்கிறது. 

பலரும் எடை குறைவாகத்தான் இருக்கிறேன், ரத்தத்தில் சுகர் இல்லை, ஆனால், கொலஸ்ட்ரால் இருக்கிறது என்று கூறுவார்கள். பொதுவாக துவர்ப்பு சுவை உள்ள பொருட்களுக்கு கொழுப்பை வெளியேற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது.  அந்த வகையில் துவர்ப்பு சக்தி உள்ள கொட்டைப் பாக்கிற்கு, உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது. ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பையும் கரைக்கக்கூடியது.

Advertisment
Advertisements

இந்த கொட்டைப் பாக்கை எப்படி பயன்படுத்தலாம் என்றால், கொட்டைப் பாக்கை பவுடர் மாதிரி அரைத்து வைத்துக்கொண்டு, இதை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துக்கொண்டு வர வேண்டும். அப்படி குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் பிரச்னை சரியாகும். பெண்களுக்கு தைராய்டு பிரச்னை, ஃபைப்ராய்டு யுட்ரெஸ் பிரச்னை இருந்தால், இந்த கொட்டைப் பாக்கு தண்ணீரை குடிக்கலாம்.

கொட்டைப் பாக்கை பவுடர் செய்ய முடியாது என்றால், அவர்கள் இரவில் ஒரு கொட்டைப் பாக்கை எடுத்து தூளாக நசுக்கி 300 மி.லி தண்ணீரில் ஊற வைத்துவிட வேண்டும். காலையில் அந்த தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, இதனுடன் சோம்பு, சீரகம் கொஞ்சமாக சேர்த்து, 100 - 150 மி.லி ஆக வர வரைக்கும் நன்றாகக் கொதிக்க வைத்து, வடி கட்டி குடிக்க வேண்டும். இப்படி கொட்டைப் பாக்கை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் தைராய்டு பிரச்னை, மாதவிடாய் பிரச்னை ஆகியவை சரியாகும். 

நெஞ்சில் சளி இருந்தால், கபம் இருந்தால் இந்த கொட்டைப் பாக்கு பவுடரை வெந்நீரில் கலந்து குடித்தால் வெளியேற்றும். மலச்சிக்கலைத் தீர்க்கும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.  

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: