உடல் எடை அதிகரிக்க இந்த நெய்... 15 நாளில் மேஜிக்: டாக்டர் நித்யா
வயதுக்கு ஏற்ற உடல் எடை, உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் மிகவும் எடை குறைவாக ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடை அதிகரிக்க இந்த நெய்யை சாப்பிட்டு வந்தால் 15 நாட்களில் மேஜிக் நடக்கும் என்று டாக்டர் நித்யா ஆலோசனை வழங்குகிறார்.
வயதுக்கு ஏற்ற உடல் எடை, உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் மிகவும் எடை குறைவாக ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடை அதிகரிக்க இந்த நெய்யை சாப்பிட்டு வந்தால் 15 நாட்களில் மேஜிக் நடக்கும் என்று டாக்டர் நித்யா ஆலோசனை வழங்குகிறார்.
வயதுக்கு ஏற்ற உடல் எடை, உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் மிகவும் எடை குறைவாக ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடை அதிகரிக்க 15 நாட்கள் இந்த நெய்யை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று டாக்டர் நித்யா ஆலோசனை வழங்குகிறார். அது என்ன நெய் என்று இங்கே பார்ப்போம்.
Advertisment
மருத்துவ ஆலோசனைகள், ஆரோக்கிய உணவுகள் குறித்தும் வயதுக்கு ஏற்பவும், உயரத்துக்கு ஏற்பவும் உடல் எடையை அதிகரிக்க டாக்டர் பிளஸ் என்ற யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
வயதுக்கு ஏற்பவும், உயரத்துக்கு ஏற்பவும் உடல் எடையை அதிகரிப்பதற்கு டாக்டர் நித்யா கூறியிருப்பதாவது: “நிறைய பேர் 20 வயது 30 வயது ஆனாலும் வயதுக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் மிகவும் எடை குறைவாக இருப்பார்கள். அதே போல, நல்ல உயரமாக இருப்பார்கள். ஆனால், உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் ரொம்ப ஒல்லியாக இருப்பார்கள். பேசுவதற்குகூட சத்து இல்லாத மாதிரி இருப்பார்கள். இப்படி ஒல்லியாக, எடை குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், சின்ன வயதில் இருந்து இப்படிதான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால், இப்போதும் ஒல்லியாக இருக்கிறேன் என்று கூறுவார்கள். இப்படி, வயதுக்கு ஏற்பவும், உயரத்துக்கு ஏற்பவும் உடல் எடை இல்லாமல் மிகவும் எடை குறைவாக இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளனர்.
உடல் எடை மிக குறைவாக இருப்பதற்கு காரணம், குடல் பகுதியில் உணவில் இருந்து சத்துக்களை உட்கிரகிப்பதில் பிரச்னை இருக்கும். கல்லீரல் செயல்பாட்டில் பிரச்னை இருக்கலாம், உடல் சூடு அதிகமாக இருப்பதால் பிரச்னை இருக்கலாம். அவர்களுக்கு அனீமியா என்கிற ரத்தசோகை இருக்கலாம். உடல் சூடு காரணமாக பெண்களுக்கு வெள்ளைப் படுததல் ஏற்படும். ஆண்களுக்கு இரவில் தூக்கத்திலேயே விந்து அணுக்கள் வெளியேறும்.
Advertisment
Advertisements
அதனால், இவற்றை சரி செய்ய வேண்டும். அதற்கு, குடல் பகுதியை சரி செய்ய அவர்களுக்கு வாயு விடங்க சூரணம் கொடுக்கப்படும். இதை இரவு தேனில் கலந்து 15 நாள் சாப்பிட்டு வந்தால் குடல் பகுதியில் உள்ள கழிவுகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி, குடற்புழுக்களை வெளியேற்றி, குடல் பகுதியின் சத்துக்களை உட்கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கும்.
உணவில் நெய் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கலாம். குறிப்பாக பெண்கள் வெண்பூசணி நெய், சதாவரி நெய் வாங்கி சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால், உடலில் இருக்கக்கூடிய உஷ்ணம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை அதிகரிக்கும். அதே போல, ஆண்கள் அஸ்வகந்தா நெய் வாங்கி சாப்பிட்டால் உடல் சூடு குறையும், சாப்பிட்ட உணவு நன்றாக செரிமானம் ஆகி உடல் எடை கூடும்.
அதே போல தினமும் கொஞ்சம் கொஞ்சம் முளைக்கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெண்ணெய், நெய் என பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டால் உடல் சூடு குறைந்து, உடல் எடை அதிகரிக்கும். இரவு தூங்கச் செல்லும் முன், பாலில் கால் டீஸ்பூன் கசகசா, 2 ஏலக்காய் போட்டு சாப்பிடலாம். இதனால், உஷ்ணம் குறைந்து செரிமானம் நன்றாக நடந்து, குடல் பகுதியில் சத்துக்களை உட்கிரக்கிக்கும் தன்மை அதிகரித்து உடல் எடை கூடும்.
அதே போல, உடல் எடையை அதிகரிக்க, சித்தமருத்துவ மூலிகைகளான அஸ்வகந்தா சூரணம், சதாவரி சூரணம், சீந்தில் சேர்ந்த, அமிர்தவல்லி சேர்ந்த மருந்துகள் பயன்படுத்தும்போது, கொஞ்சம் கொஞ்சமாக உடல் சூடு குறைந்து, சாப்பிடும் உணவில் இருந்து சத்துகள் உட்கிரகிக்கப்பட்டு உடலில் வன்மை உண்டாக ஆரம்பிக்கும், உடல் எடை கூடும்.” என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.