/indian-express-tamil/media/media_files/2025/04/15/uzb9geaTvtHXvVWtMUN6.jpg)
இந்த அற்புத அரிசியை மூன்று வேளையும் உணவாக எடுத்துக்கொண்டால் 10 நாட்களில் சுகர் குறையும் என்று டாக்டர் பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்குகிறார்.
சுகர் கட்டாயமாக குறைய வேண்டும் என்று சொல்பவர்களுக்கு எண்ணி 10 நாட்களில் சுகர் குறையும். 10 நாள் சிகிச்சை என்பதைவிட உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றுங்கள். குறிப்பாக இந்த அற்புத அரிசி உணவை 3 வேளையும் எடுத்துக்கொள்ளுங்கள் சுகர் குறையும் என்று டாக்டர் பன்னீர் செல்வம் ஆலோசனை கூறுகிறார்.
இந்த அற்புத அரிசியை மூன்று வேளையும் உணவாக எடுத்துக்கொண்டால் 10 நாட்களில் சுகர் குறையும் என்று ஹெல்த் கேஃபி தமிழ் (@healthcafetamil) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்குகிறார்.
டாக்டர் பன்னீர் செல்வம் கூறுகையில், “சுகர் கட்டாயமாக குறைய வேண்டும் என்று சொல்பவர்களுக்கு எண்ணி 10 நாட்களில் சுகர் குறையும், 10 நாள் சிகிச்சை என்பதைவிட உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றுங்கள்.
இந்த 10 நாளில் என்ன உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்றால், குதிரைவாலி என்று ஒரு அரி இருக்கிறது. இந்த குதிரைவாலி அரிசியை நாம் காலையில் இட்லியாகவும் செய்துகொள்ளலாம், இரவு தோசை, இட்லியாகவும் செய்துகொள்ளலாம். மதியம் உணவாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மூன்று வேளையும் இந்த குதிரைவாலி அரிசியை உணவாக எடுத்துக்கொண்டு வருகிறீர்கள் என்றால், நீங்கள் சுகருக்கு 3 வேளை மாத்திரை போடுகிறீர்கள் என்றால், அதை 2 வேளை மட்டும் போடுவதாக மாற்றி, பிறகு ஒரு வேளை மட்டுமே சுகர் மாத்திரை போடுவதாக மாற்றி, சுகர் அளவை நார்மலாக கொண்டுவந்துவிடலாம்” என்று டாக்டர் பன்னீர் செல்வம் ஆலோசனை கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.