40 வயது நண்பர்களே! உணவில் கவனமா இருங்க; டாக்டர் சிவராமன் அட்வைஸ்
உணவுமுறையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் டாக்டர் சிவராமன், 40 வயது நண்பர்கள் என்ன மாதிரி உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
உணவுமுறையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் டாக்டர் சிவராமன், 40 வயது நண்பர்கள் என்ன மாதிரி உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
டாக்டர் சிவராம் கூறுகிறார்: “காலை உணவாக என்ன சாப்பிடலாம், காலை உணவாக தினம் ஐந்து இட்லி, கெட்டி சட்னி, ஒரு குழிப்பானை நிறைய சாம்பார் சாப்பிடுவேன், இட்லி நல்லது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் அதனால் இட்லி சாப்பிடுகிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால், நிறைய பேர் இங்கே 40 வயதை ஒட்டி இருக்கிறீர்கள். அதனால், நீங்கள் தயவு செய்து அப்படி நினைத்து சாப்பிட வேண்டாம். குழந்தைகளுக்கு இட்லி மிகச் சிறப்பான உணவு சந்தேகம் வேண்டாம். ஆனால், 50 வயது ஆகிறது 45 வயது ஆகிறது என்றால் நமக்கு காலை சாப்பாடு என்பது கொஞ்சம் காய்கறி 2 முட்டைகள், மீன் சாப்பிடுபவர்களாக இருந்தால் 2 மீன் துண்டுகள் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை, ஒரு கைப்பிடி அளவு பாதாம் பருப்பு, முட்டை சாப்பிடாதவர்கள் கொஞ்சம் பன்னீர் சூப்பாகவோ ஸ்மூதியாகவோ எடுத்துக் கொண்டால் இது போதும். காலை சாப்பாடு உங்களுக்கு இதுதான்.
Advertisment
இதை சொன்னால் சில பேர் கேட்கிறார்கள் இது உணவுக்கு பின்னா, உணவுக்கு முன்னா என்று கேட்கிறார்கள். இல்லை, இதுதான் உங்களுக்கு காலைச் சாப்பாடு, இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
40 வயதுக்கு மேற்பட்டவர்களின் மதியம் சாப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் சிவராமன் கூறுகையில், “மதியம் சாப்பாடு என்றால் ஒரு ஒரு குழி நிறைய சோறை குவித்து வைத்து, ராஜ்கிரன் படத்தில் குழி நிறைய குழம்பு ஊற்றி, உருட்டி உருட்டி சாப்பிடுவது போல சாப்பிடக் கூடாது. சோறு ஒரு கை அளவு தான் இருக்க வேண்டும். மீதி எல்லாம் காய்கறிகளாக இருக்க வேண்டும். முதலில் பரிமாறுவதே காய்கறியாகத்தான் பரிமாற வேண்டும். அவரைக்காய் பொரியல், நல்ல சுரைக்காய் கூட்டு, பூசணிக்காய் கூட்டு, இரண்டு மீன் துண்டு, ரெண்டு கோழி துண்டு இதையெல்லாம் வைத்துக் கொண்டு, கொஞ்சமாக சோறு ஒரு சின்ன கப்பில் வையுங்கள். இனிமேல் சோறு பரிமாறுவதற்கு, சோறு எடுப்பதற்கு ஒரு சின்ன ஸ்பூன் தான் தேவையாக இருக்க வேண்டும். சோறு எப்படி இருக்க வேண்டும் என்றால் பாயாசம் வைப்பதற்கு ஒரு கப் இருக்கும் இல்லையா அந்த மாதிரி ஒரு கப்பில் தான் சோறு இருக்க வேண்டும். அந்த சோறும் வெள்ளைச் சோறாக இருக்க வேண்டாம். அது தூயமல்லி சம்பவமாக இருக்கட்டும், காடைக்கண்ணியாக இருக்கட்டும், கருப்பு கவுனியாக இருக்கட்டும், மாப்பிள்ளை சம்பாவாக இருக்கட்டும். அப்படி நிறமுள்ள அரிசியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட்டால்தான் சர்க்கரை வராமல் இருக்கும். அப்படி சர்க்கரை வந்தால் கட்டுப்பாட்டில் இருக்கும். தயவு செய்து ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் எந்த ஒரு மருத்துவ முறையாலும் அது அது நவீனமோ சித்தமோ ஆயுர்வேதமோ வெறும் மருந்துகளை மட்டும் வைத்துக் கொண்டு சர்க்கரை நோயை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது அவையெல்லாம் கொஞ்சம் பாதுகாப்பு கொடுக்கும். ஆனால், யார் சக்கரையை கட்டுப்படுத்துகிறார்கள் என்றால், அவர்களுக்கு எப்போதுமே எச்.பி.ஏ.ஒன்.சி அளவு 6.2 இருக்கிறது என்றால் உணவை கட்டுப்படுத்துபவர்கள் தான் சர்க்கரையை இப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்” என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.