ஒரு கப் மோரில் இவ்வளவு கால்சியம் சத்து இருக்கு... இப்படி செஞ்சு குடிச்சுப் பாருங்க: மருத்துவர் சிவராமன்

ஒரு கப் மோரில் எவ்வளவு கால்சியம் சத்து இருக்கிறது, மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சியம் சத்து தேவை, மற்றும் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கமாகக் கூறியுள்ளார். மேலும், மோர் எப்படி செய்து குடிக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஒரு கப் மோரில் எவ்வளவு கால்சியம் சத்து இருக்கிறது, மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சியம் சத்து தேவை, மற்றும் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கமாகக் கூறியுள்ளார். மேலும், மோர் எப்படி செய்து குடிக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
dr sivaraman

ஒரு கப் மோரில் எவ்வளவு கால்சியம் சத்து இருக்கிறது, மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சியம் சத்து தேவை, மற்றும் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கமாகக் கூறியுள்ளார்.

ஒரு கப் மோரில் எவ்வளவு கால்சியம் சத்து இருக்கிறது, மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சியம் சத்து தேவை, மற்றும் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கமாகக் கூறியுள்ளார். மேலும், மோர் எப்படி செய்து குடிக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

Advertisment

மருத்துவர் கு. சிவராமன் பாரம்பரிய சித்த மருத்துவத்தை நவீன அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் முன்னோடியாகத் திகழ்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கட்டுரைகள் மற்றும் பொது உரைகள் மூலம் சித்த மருத்துவத்தின் சிறப்புகளையும், எளிய மருத்துவ முறைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். குறிப்பாக, உணவு முறைகளுக்கும் உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பை அவர் வலியுறுத்துவது பலரையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் திரும்பத் தூண்டுகிறது.

மோரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து மருத்துவர் சிவராமன் கூறுகையில், “ஒரு கப் மோர் எடுத்துக்கொண்டால் அதில் 240 மில்லி கிராம் கால்சியம் சத்து இருக்கிறது. ஆனால், நமக்கு ஒரு நாளைக்கு 1 கிராம் கால்சியம்தான் வேண்டும். அதனால், ஒரு நாளைக்கு நாம் 2 கப் மோர் குடித்துவிட்டால், மீதி கால்சியம் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருந்து கிடைக்கும் கால்சியம் உடன் சேர்ந்து நமக்கு தேவையான கால்சியம் கிடைக்கும். அதனால், மோர் நிறைய எடுத்துக்கொள்ளலாம். தயிரை விட மோர் நிறைய எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறுகிறார்.

Advertisment
Advertisements

மோர் எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

தயிரைக் கடைந்து வெண்ணெய் நீக்கி மோர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 டம்ப்ளர் மோர் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊற்றுங்கள், அதில் ஒரு துண்டு இஞ்சி போடுங்கள், கொத்தமல்லி சிறிது அளவு போடுங்கள், உப்பு மிகவும் குறைவாகப் போடுங்கள், நன்றாக அரைத்து சிறிது தண்ணீர் ஊற்றி குடியுங்கள். உங்களுக்கு தேவையான கால்சியத்தை மோர் மூலமாக கிடைக்கும்.   

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: