தினமும் பால் குடிப்பது அவசியமா? டாக்டர் சிவராமன் விளக்கம்
இன்று மருத்து ஆய்வுகள் பால் அவசியம் இல்லாத உணவு, தேவையில்லாத உணவு என்று கருத்துகள் வருகின்றன. உண்மையில் பால் குடிப்பது அவசியமா? இல்லையா என மருத்துவர் சிவராமன் விளக்கி உள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன் பால் சாப்பிடுவது நல்ல பழக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று மருத்து ஆய்வுகளில் பால் அவசியம் இல்லாத உணவு, தேவையில்லாத உணவு என்று கருத்துகள் வருகின்றன. இதனால் பலரும், தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு பால் குடிக்கலாமா, வேண்டாமா என குழப்பம் அடைந்துள்ளனர். அந்த வகையில் சித்த மருத்துவர் சிவராமன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். மனிதன் மட்டும் தான் தாய் பால் தவிர மற்ற விலங்கின் பாலை குடிக்கிறார்கள்.
Advertisment
இதுவே இயற்கைக்கு மாறாக உள்ளது. பால் கொடுக்கும் மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்களில் பல ரசாயனம் சேர்க்கப்படுகிறது. அதை நாம் சாப்பிடும் போது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதனால் பிரச்சனைகள் வருகிறது. குழந்தைகள் பொதுவாக 2-3 வயதில் இருக்க கூடியவர்கள் அடிக்கடி சளி, காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்கள், ஒவ்வாமை வருவது வழக்கமாக உள்ளது.
இதற்கு பெரும்பாலும் பால் தான் காரணம். இருப்பினும் அதில் உள்ள வே ப்ரோட்டீன் நல்லது செய்யக் கூடியது. அதே நேரம் உடல் பருமனாக உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து பால், பால் பவுடர் கொடுப்பது அவர்களின் உடல் எடையை மேலும் கூட்டும்.
Advertisment
Advertisement
எனவே மருத்துவர் அறிவுரைபடி குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும். கால்சியம் சத்து குறைவாக உள்ளது, மாதவிடாய் முடிவில் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை அறிவுரைபடி மருந்தாக பால் குடிக்க சொன்னால் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news