/indian-express-tamil/media/media_files/2025/04/25/BA7W7xlBPf8d1a0OfPAO.jpg)
வாய்வுத் தொல்லையை எப்படி போக்குவது என்பது குறித்து ஹெல்த் தமிழ்நாடு (Health Tamilnadu) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் சிவராமன் பேசியுள்ளார்.
வாய்வு தொல்லை இருந்தால் மூட்டுவலி உள்ளிட்டவை ஏற்படும், வாய்வு தொல்லை போக மோரில் இந்த பொருளை சேர்த்து குடியுங்கள், இனி வாய்வு தொல்லை இல்லை என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். மோரில் என்ன பொருள் கலந்து குடிக்க வேண்டிய பொருள் என்ன என்று பார்ப்போம்.
சித்த மருத்துவம், இயற்கை உணவு முறைகள், பாரம்பரிய உணவுகள், இயற்கை மருத்துவம் குறித்து அறிவியல் மொழியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் டாக்டர் சிவராமன். வாய்வுத் தொல்லையை எப்படி போக்குவது என்பது குறித்து ஹெல்த் தமிழ்நாடு (Health Tamilnadu) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் சிவராமன் பேசியுள்ளார்.
வாய்வுத் தொல்லை போக்குவது குறித்து டாக்டர் சிவராமன் கூறியிருப்பதாவது: “ஒருவருக்கு வாய்வு இருக்கிறது என்றால், அந்த வாய்வுவை எப்படி போக்குவது என்று பார்க்க வேண்டும். வாய்வுவை உடலில் தங்க வைக்கக் கூடாது. வாய்வுவைப் போக்க மோரில் கொஞ்சம் பெருங்காயம் போட்டு குடிக்க வேண்டும். காலையில் 11 மணி போல மோரில் கொஞ்சம் பெருங்காயம் போட்டு குடித்தால், அது வாய்வுவைத் தங்கவிடாது.
அதே போல, வாய்வுத் தொல்லை போக, காலையிலும் மாலையிலும் புதினா சட்னியை சாப்பிடலாம். புதினாவிலோ அல்லது கொத்தமல்லியிலோ சட்னி அரைத்து சாப்பிடலாம்.
அதே போல, சீரகத் தண்ணீர் குடிக்கலாம். கேரளாவில் சீரகத்தை வானலியில் வறுத்து, அதை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பொன்னிறமாக மாறிய பிறகு, அந்த தண்ணீரைத்தான் காலை, மதியம், மாலை என்று குடிப்பார்கள். இப்படி தண்ணீர் குடித்தால் வாய்வுத் தொல்லை நீங்கும். அதனால், வாய்வுத் தொல்லை உள்ளவர்கள், இது போல உணவில் அக்கறையாக இருந்தாலே, உடலில் வாய்வு தங்காது, வாய்வு சேராது.” டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.