/indian-express-tamil/media/media_files/2025/04/10/jxbHQCV53N84P6jYhZyO.jpg)
சர்க்கரை வியாதிக்கு நம் வீட்டில் உள்ள இலை, சுகருக்கு பெரிய எதிரி அதை சட்னி செய்து சாப்பிடலாம் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். image: facebook/ Gurusamy Sivaraman and YouTube/ @mayakitchenn
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக, சுகருக்கு பெரிய எதிரி இந்த இலைதான், அதை இப்படி சட்னி செய்து சாப்பிடலாம் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். அது என்ன இலை, எப்படி சட்னி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
இயற்கை மருத்துவம், இயற்கை உணவு முறைகள், பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மகத்துவம், நமது பாரம்பரிய உணவுகளின் மருத்துவ குணங்கள் குறித்தும் தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் மேடைதோறும் பேசி பரப்பி வருகிறார் மருத்துவர் சிவராமன்.
சர்க்கரை வியாதிக்கு நம் வீட்டில் உள்ள இலை, சுகருக்கு பெரிய எதிரி அதை சட்னி செய்து சாப்பிடலாம் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். அது என்ன இலை, எப்படி சட்னி செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அதே போல, மாயா கிச்சன் என்ற யூடியூப் சேனலில் கருவேப்பிலை சட்னி செய்வது எப்படி என்று செய்து காட்டியுள்ளனர்.
மருத்துவர் சிவராமன் கூறுகிறார்: “தினமும் நம் வீட்டில் உள்ள விஷயம் கருவேப்பிலை, ஆனால், நாம் எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோம்? கருவேப்பிலையை அப்படி தூக்கி தூர வைக்கிறோம். இலையில் இருந்து ஓரமாக வைக்கிறோம். ஆனால், கருவேப்பிலை தினமும் சாப்பிட வேண்டும். கருவேப்பிலையை சட்னியாக அரைத்து இட்லிக்கு தொட்டு சாப்பிடலாம். துவையலாக அரைத்து அதை தோசையில் தடவி சாப்பிடலாம்.
கருவேப்பிலை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய பணியாற்றுகிறது. கருவேப்பிலை ஒன்று ஐ.ஜி.டி- என்று சொல்வார்கள். இம்பேய்ர்ட் குளுகோஸ் டாலரன்ஸ் டயாபட்டிக்காக மாறாது என்று சிக்காகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழகம் காப்புரிமை வைத்திருக்கிறார்கள். ஆனால், நம்ம ஊரில் கருவேப்பிலையை எப்படி எடுத்து தூரப்போடுகிறார்கள். எப்படி தமிழ்நாட்டில் நம்மிடம் ஏகப்பட்ட உணவுகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இப்போது கருவேப்பிலை சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம். கருவேப்பிலை சட்னி செய்முறை:
ஸ்டவ்வைப் பற்றவைத்து ஒரு கடாயை எடுத்த் ஸ்டவ்வில் வையுங்கள். தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றுங்கள். உளுந்து ஒரு ஸ்பூன் போடுங்கள். 10 பல்லு பூண்டு போடுங்கள். 10 சின்ன வெங்காயம் போடுங்கள். 2 பச்சை மிளகாய் போடுங்கள். காய்ந்த மிளகாய் போடுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள். வதக்குங்கள்.
அடுத்து, கருவேப்பிலையை சுத்தம் செய்து போடுங்கள். சிறிது வதக்குங்கள். அதனுடன் துருவிய தேங்காயைப் போடுங்கள். அதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்தால் கருவேப்பிலை சட்னி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.