அரிசியை விட ஆகச் சிறந்தது; தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அவசியம் கொடுங்க: டாக்டர் சிவராமன்

அரிசியை விட ஆகச் சிறந்த உணவு, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும் என்று மிக எளிமையான இந்த தானியத்தை டாக்டர் சிவராமன் பரிந்துரைக்கிறார். அது என்ன தானியம், அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

அரிசியை விட ஆகச் சிறந்த உணவு, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும் என்று மிக எளிமையான இந்த தானியத்தை டாக்டர் சிவராமன் பரிந்துரைக்கிறார். அது என்ன தானியம், அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
sivaraman

சித்த மருத்துவம், இயற்கை உணவு முறை, பாரம்பரிய உணவுகளில் உள்ள நன்மைகளை ஊர் ஊராகப் பேசி பரப்பி வருபவர் மருத்துவர் சிவராமன். இவர் கேழ்வரகு பற்றி பேசிய வீடியோவை ராம் சிவரிதா ஷாட்ஸ் (@ramsivarithashorts) என்ற யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அரிசியை விட ஆகச் சிறந்த உணவு, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும் என்று மிக எளிமையான இந்த தானியத்தை டாக்டர் சிவராமன் பரிந்துரைக்கிறார். அது என்ன தானியம், அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

Advertisment

சித்த மருத்துவம், இயற்கை உணவு முறை, பாரம்பரிய உணவுகளில் உள்ள நன்மைகளை ஊர் ஊராகப் பேசி பரப்பி வருபவர் மருத்துவர் சிவராமன். இவர் கேழ்வரகு பற்றி பேசிய வீடியோவை ராம் சிவரிதா ஷாட்ஸ் (@ramsivarithashorts) என்ற யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

கேழ்வரகின் சிறப்புகள் குறித்து மருத்துவர் சிவராமன் கூறுகையில், “கேழ்வரகு ஒரு குழந்தை தாய்ப்பால் குடித்துக்கொண்டிருக்கும்போது தாய்ப்பாலில் இருந்து திட உணவுக்கு மாறும்போது, அதாவது ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவு கொடுக்கும்போது அரிசியைவிட மிகச் சிறந்த உணவு கேழ்வரகு. முதலில் கேழ்வரகு ஊறவைத்து அதிலிருந்து பால் எடுத்து அதை கஞ்சியாகக் காய்ச்சி கொடுப்பார்கள். அதற்கு அப்புறம், கேழ்வரகு மாவை சேர்த்துக் கொடுக்கலாம். அவ்வாவு சிறப்பு வாய்ந்தது கேழ்வரகு” என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

குழந்தைகளுக்கு கேழ்வரகு எப்படி செய்வது?

Advertisment
Advertisements

ஒரு கப் கேழ்வரகு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். அதில் 300 மி.லி நல்ல தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள். பிறகு அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் உற்றி நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதை வடிகட்டிக்கொள்ளுங்கள். 

இப்போது 2 கப் அளவு கேழ்வரகு பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன், 4 டேபிள்ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை போடுங்கள். நன்றாகக் கலக்குங்கள். அதை குழந்தைகளுக்கு கொடுங்கள்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: