உஷார் மக்களே... ராகி சாப்பிட்டால் சுகர் கூடுமாம்: சொல்லும் மருத்துவர் சிவராமன்
ராகி நல்லதுதானே, ராகி சாப்பிடுகிறேன், ராகி களி சாப்பிடுகிறேன் என்றால் சர்க்கரை கூடிவிடும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உஷார்.
ராகி நல்லதுதானே, ராகி சாப்பிடுகிறேன், ராகி களி சாப்பிடுகிறேன் என்றால் சர்க்கரை கூடிவிடும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உஷார்.
மருத்துவர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு (Healthy Tamilnadu) என்ற யூடியூப் சேனலில் ராகி உணவு குறித்தும், கம்பஞ்சோறு குறித்தும், எந்த சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் கூறியுள்ளார்.
ராகி நல்லதுதானே, ராகி சாப்பிடுகிறேன், ராகி களி சாப்பிடுகிறேன் என்றால் சர்க்கரை கூடிவிடும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உஷார்.
Advertisment
சித்த மருத்துவர், உணவு அரசியலை பேசுபவர், ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை முறையைக் கனவு காண்பவர், தமிழ்நாட்டில் பல ஊற்களில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் மருத்துவர் சிவராமன். ஹெல்தி தமிழ்நாடு (Healthy Tamilnadu) என்ற யூடியூப் சேனலில் ராகி உணவு குறித்தும், கம்பஞ்சோறு குறித்தும், எந்த சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் கூறியுள்ளார்.
மருத்துவர் சிவராமன் கூறுகையில், கம்பஞ்சோறு சாப்பிட்டீர்கள் என்றால், அது உடைந்து அதிலுள்ள கார்போஹைட்ரேட் பிரிவதற்குள் அந்த உணவு இரைப்பையைத் தாண்டி, சிறுகுடலைத் தாண்டி கீழே போய்விடும். சிறுகுடலின் மேல் முதல் பாகத்தை தாண்டிவிட்டால், அங்கே இருந்து குளுகோஸ் உறிஞ்சுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். அதற்காகத்தான் கம்பஞ்சோறு சாப்பிடுங்கள் என்கிறோம். கம்பஞ்சோறு சாப்பிட்டால், சர்க்கரை பெரிய அளவில் டக்குனு கூடாது. வரகரிசியில் டக்குனு கூடாது. ஆனால், கேழ்வரகில் கூடிவிடும்.
Advertisment
Advertisements
ராகி நல்லதுதானே, நான் ராகி சாப்பிடுகிறேன், ராகி களி மொத்தை சாப்பிடுகிறேன் என்றால் சர்க்கரை கூடிவிடும். ராகி குழந்தைகளுக்கு நல்லது. சின்ன குழந்தைகள், பெண் குழந்தைகள், 15 வயது பருவம் எய்தியிருக்கிற பெண்களுக்கு கேழ்வரகு கொடுக்கலாம். அதில் கால்சியம் சத்து, இரும்புச் சத்து, ஃபீனால் என எல்லா சத்துகளும் இருக்கிறது. ஆனால், 45 வயது 50 வயது உடையவர்கள் என்றால் அவர்களுக்கு கம்பச் சோறுதான் நல்லது.” என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.