ஆண்களே இனிப்பு அதிகம் சாப்பிடுங்க… விந்தணு அதிகரிக்கும்; டாக்டர் யோக வித்யா

இனிப்பு சுவையை நம் உடலில் சேர்த்துக்கொள்ள ஆரம்பிக்கும்போது, அதிகப்படியான பித்தம் என்று சொல்லக்கூடிய உடல் உஷ்ணம் தனிந்து, அவர்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியாகும் என்று டாக்டர் யோக வித்யா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இனிப்பு சுவையை நம் உடலில் சேர்த்துக்கொள்ள ஆரம்பிக்கும்போது, அதிகப்படியான பித்தம் என்று சொல்லக்கூடிய உடல் உஷ்ணம் தனிந்து, அவர்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியாகும் என்று டாக்டர் யோக வித்யா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
yoga

விந்தணுக்கள் அதிகரிக்க ஆண்கள் இனிப்பு சாப்பிடுங்கள் என்று எத்னிக் ஹெல்த் கேர் யூடியூப் சேனலில் டாக்டர் யோக வித்யா ஆலோசனை கூறியுள்ளார்.

இனிப்பு சுவையை நம் உடலில் சேர்த்துக்கொள்ள ஆரம்பிக்கும்போது, அதிகப்படியான பித்தம் என்று சொல்லக்கூடிய உடல் உஷ்ணம் தனிந்து, அவர்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியாகும் என்று டாக்டர் யோக வித்யா ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

Advertisment

விந்தணுக்கள் அதிகரிக்க ஆண்கள் இனிப்பு சாப்பிடுங்கள் என்று எத்னிக் ஹெல்த் கேர் யூடியூப் சேனலில் டாக்டர் யோக வித்யா ஆலோசனை கூறியுள்ளார்.

டாக்டர் யோக வித்யா கூறுகையில், “விந்தணுக்கள் அலண்டுபோய், அப்படியே சுருண்டு, சுருங்கிவிடும் என்பதுதான் நீர்த்துமிழ் வற்றிப்போகிற அளவுக்கு அவர்களுக்கு உடலின் வெப்பம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. விந்தணுக்கள் அற்ற தன்மைக்கு, குறைந்த விந்தணுக்களுக்கும் சரி இதுதான் காரணமாக இருக்கிறது.

Advertisment
Advertisements

ஒவ்வொரு சுவையும் இரண்டு பூத்தை வைத்துதான் செய்கிறோம். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இந்த ஐம்பூதங்களால்தான் உலகமே தோன்றி இருக்கிறது. அந்த மாதிரி இந்த இனிப்புச் சுவையில், மண் + நீர் சேர்ந்தால் இனிப்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

அப்போது, பொதுவாக யோசித்துப் பாருங்கள், ஒரு நெருப்பு இருக்கிறது என்றால் நீர் ஊற்றி அணைக்கிறோம், அப்படி இல்லையென்றால், மண்ணைப் போட்டால், நெருப்பு அணைந்துவிடும். அந்த மாதிரி, இந்த மண்ணும் நீரும் சேர்ந்த இனிப்பு, இந்த இனிப்பு சுவையை நம் உடலில் சேர்த்துக்கொள்ள ஆரம்பிக்கும்போது, அதிகப்படியான பித்தம் என்று சொல்லக்கூடிய உடல் உஷ்ணம் தனிந்து, அவர்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியாகும் என்பதனால், சித்த மருத்துவத்தில், லேகியங்கள் தாக்குகள் பலம்பெறும் லேகியமாகட்டும், மதன காமேஷ்வரம் லேகியமாகட்டும், ஓரீதழ் தாமரைச் சூரணம், அமுக்கராச் சூரணம் இதெல்லாம் தேனுடன் சேர்ந்து, பணங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை போன்ற இனிப்புடன் சேர்த்து இந்த மாதிரியான மூலிகைகளைக் கொடுக்கும்போது, அவர்களுக்கு தாது விருத்தியாகிறது, அல்லது விந்தணுக்கள் கூடுவதை பரிசோதனை ரிப்போர்ட் மூலமாக பார்க்க முடியும்” என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: