/tamil-ie/media/media_files/uploads/2022/10/download-56.jpg)
உலக அளவில் இதுவரை நடந்த ஆராய்ச்சிகள் டீ குடிப்பதால் சர்க்கரை நோய் அதாவது டைப் 2 வகை டயபட்டிஸை சில சதவிகிதம் குறைக்கும் என்று கூறப்படுகிறது. தினமும் 4 கப் டீ குடிப்பதால் 17 சதவிகிதம் சர்க்கரை நோய் வரும் வாய்புகள் குறைவு. அதுபோல 3 கப் டீ குடிப்பதால் 4 % சர்க்கரை நோய் வரும் அபாயம் குறையுமாம். ஆனால் இந்த ஆய்வுகள் இந்தியாவுக்கு பொருந்தாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகளவில் தேயிலை மற்றும் நீருமே டீ என்று பருகப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தேயிலை டிக்காஷன் மற்றும் பால் கலந்து சர்க்கரையுடன் குடிப்பதால் அது சர்க்கரை நோயை அதிகப்படுத்தும். அதுவும் 4 டீ என்றால் சர்க்கரை அளவு எகிரிவிடும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உலகளவில் டீயில் பல வகை இருப்பதால் இந்த ஆய்வு எல்லாருக்கும் பொருந்தாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியர்களுக்கு பொருந்தவே பொருந்தாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us