/indian-express-tamil/media/media_files/2025/01/03/gSOsdJ7MZ9xoLQHTwhxa.jpg)
குளிர், மழை காலத்தில் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்படும். நுரையீரல் தொற்று ஏற்படும். அந்த வகையில் நுரையீரலில் சளி கட்டாமல் தடுக்கும் உணவுகள் பற்றி சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார். குறு மிளகு எடுத்துக் கொள்ளலாம். இதை காலம் காலமாக செய்து வருகிறோம்.
மிளகு காரம் மட்டுமல்லாமல் நிறைய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. நிறைய ஆய்வுகளும் செய்துள்ளனர். மிளகில் உள்ள எலமென்ட்டுகள் நுரையீரலில் சளி சேர்வதை தடுக்கிறது. நுரையீரல் சுருக்கதை விரிக்க வைக்க கூடியது. இன்ஹேலர் செய்யக் கூடிய வேலையை மிளகு செய்யும்.
சாப்பாட்டில் மிளகு சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி, கீரை என எது செய்தாலும் அதில் மிளகு சேர்த்துக கொள்ளலாம். 4-8 மிளகு போட்டுக் கொள்ளலாம். மிளகு நச்சுத் தன்மையை போக்கும். அடுத்து திப்லி . இதுவும் மிளகு செய்யும் வேலையை செய்யும். திப்லியில் ரசம் வைத்து சாப்பிடுவார்கள். திப்லி ரசம் சளியை அறுக்க கூடியது. நுரையீரலில் உள்ள சளியை வெளியே எடுத்துப் போடக் கூடிய தன்மை உண்டு.
மற்றொன்று கரிசலாங்கன்னி கீரை. வெள்ளை கரிசலாங்கன்னியில் இன்றைய பல ஆய்வுகள் செய்யப்படுகின்றன. மழைக் காலங்களில் அல்லது அடிக்கடி நுரையீரல் தொற்று ஏற்படக் கூடியவர்கள் கரிசாலை தேநீர் குடிக்கலாம். கற்பூர வள்ளி, துளசி போன்ற எளிய பொருட்களை சாப்பிடலாம். இது சளி வராமல் தடுக்க உதவும் என சித்த மருத்துவர் சிவராமன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.