/tamil-ie/media/media_files/uploads/2023/03/do.jpg)
குழந்தைகளுக்கு இந்த ரெசிபி நன்றாக பிடிக்கும். ரொம்ப சுலபமாக செய்யலாம்.,
தேவையான பொருட்கள்
புழுங்கல அரிசி
உளுந்தம் பருப்பு
பெரிய கற்கண்டு பொடித்தது
பேரீச்சம்பழம்
திராட்சை
டூட்டி ஃப்ரூட்டி
தேன்
முந்திரிப் பருப்பு
எண்ணெய்
செய்முறை: உளுந்தம் பருப்பு, அரிசி ஆகியவற்றை தனியாக சுமார் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தொடர்ந்து பேரீச்சழத்தை நன்றாக நறுக்கி, அதை அரிசி மற்றும் உளுந்தம் பருப்போடு அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இந்த மாவை 10 மணி நேரம் அப்படியே விடவும். தொடர்ந்து தோசை ஊற்றுவதற்கு முன்பாக பொடித்த கற்கண்டை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தோசை ஊற்றியதும் அதன் மீது திராட்சை, முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி மேலே தூவ வேண்டும். தொடர்ந்து தேன் ஊற்றி தோசை சுட வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.