இனி வத்தல் செய்ய ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்... இப்படி ஈசியா செய்யலாம்

வத்தல் செய்முறையை பார்த்து நாம் பயந்திருப்போம். ஆனால் இப்படியும் எளிதாக வத்தல் செய்ய முடியும். ஜவ்வரிசி வத்தலை இப்படி செஞ்சு பாருங்க பாஸ்.

வத்தல் செய்முறையை பார்த்து நாம் பயந்திருப்போம். ஆனால் இப்படியும் எளிதாக வத்தல் செய்ய முடியும். ஜவ்வரிசி வத்தலை இப்படி செஞ்சு பாருங்க பாஸ்.

author-image
WebDesk
New Update
இனி வத்தல் செய்ய ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்... இப்படி ஈசியா செய்யலாம்

வத்தல் செய்முறையை பார்த்து நாம் பயந்திருப்போம். ஆனால் இப்படியும் எளிதாக வத்தல் செய்ய முடியும். ஜவ்வரிசி வத்தலை இப்படி செஞ்சு பாருங்க பாஸ்.

Advertisment

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – 2 கப், பச்சை மிளகாய் – 5, சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன்

செய்முறை:  

Advertisment
Advertisements

ஜவ்வரிசி அலசி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.  பிறகு இரண்டு கப் ஜவ்வரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் வரை அப்படியே ஒரு மூடி போட்டு ஊற வைத்து விடுங்கள். மூன்று மணி நேரம் கழித்து பார்த்தால் ஜவ்வரிசி தண்ணீரும் சமமாக ஊறி இருக்கும். இதில் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் நைசான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். இந்த ஜவ்வரிசையில் ஊறிய தண்ணீரே போதும்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை வைத்து விடுங்கள். அடி கனமான குக்கராக இருக்க வேண்டும். அதில் ஒரு கப் ஜவ்வரிசிக்கு நான்கு கப் வீதம், மொத்தம் எட்டு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் சீரகத்தையும் அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்து தண்ணீரை நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக சூடான உடன் அதாவது கொதிக்கும் பதத்திற்கு முன்பு, இந்த அரைத்து வைத்திருக்கும் ஜவ்வரிசி கஞ்சி அதில் ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். கட்டியாகி விடக்கூடாது நன்றாக கலந்ததும் கட்டி இல்லாமல் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டு அடுப்பை அணைத்து விட்டு குக்கர் மூடியை போட்டு மூடி வைத்து விடுங்கள். ஒரு 3 மணி நேரம் அப்படியே இருக்கட்டும் ஜவ்வரிசி நன்றாக ஆறி இருக்கும். இட்லி மாவு எடுத்து ஊற்றும் பதத்திற்கு இந்த ஜவ்வரிசி மாவு இருக்க வேண்டும் நீங்கள் சூட்டிலே அதை ஊற்றி மூடி வைத்ததால் அதிலே இந்த ஜவ்வரிசி வெந்து இருக்கும். அவ்வளவுதான் ஜவ்வரிசி வத்தலுக்கு மாவு தயாராகி விட்டது.

இப்போது இதை உங்கள் வீட்டில் ஒரு மெலிதான காட்டன் வேஷ்டியோ, கவர் எதுவாக இருந்தாலும் அதை விரித்து இந்த மாவை எடுத்து குட்டி வத்தலாக ஊற்றி வைத்து விடுங்கள். இது அப்படியே உங்கள் வீட்டில் பேன் காற்றிலே ஆற விடுங்கள். அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை இது இப்படி காய வைக்க வேண்டும். வத்தல் நன்றாக மொறுமொறு வென்று காய்ந்த பிறகு எடுத்து ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். ஜவ்வரிசி வத்தல் ரெடியாகிவிடும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: