/indian-express-tamil/media/media_files/2025/03/15/BfpU0cPwZGn4rRnsX24x.jpg)
அதிக நேரம் கிச்சனில் செலவிட்டு அதிக மெனக்கெடலுடன் செய்யும் உணவுகளை விட, சில நேரத்தில் சிம்பிளாக செய்யும் உணவுகள் மிகவும் ருசியாக இருக்கும். மேலும், இவை பிரபலம் அடையவும் வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில், விரைவாக செய்ய வேண்டும் என்ற நிலையில் பிரபல நட்சத்திர உணவகத்தில் உருவாக்கப்பட்டது தான் இளநீர் பாயாசம் என்று சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குக் செய்யாமல் இதனை தயாரிக்கலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இளநீர்,
பாதாம்,
முந்திரி,
வால்நட்,
பிஸ்தா,
தேங்காய் துருவல்,
தேங்காய் வழுக்கை மற்றும்
கண்டன்ஸ்ட் மில்க்
செய்முறை:
பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா ஆகிய அனைத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு இளநீர் மற்றும் தேங்காய் பால் ஊற்ற வேண்டும்.
இத்துடன் சிறிது கண்டன்ஸ்ட் மில்க், தேங்காய் துருவல் மற்றும் தேங்காய் வழுக்கை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இறுதியாக, இதன் மீது வெட்டி வைத்திருந்த பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா பருப்புகளை சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான இளநீர் பாயாசம் தயாராகி விடும்.
இதனை வயது பேதமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இளநீர் பாயாசத்தை 5 நிமிடங்களில் செய்து முடித்து விடலாம் என்பது கூடுதல் சிறப்பு.
நன்றி - Ram Sivaritha Shorts Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.