/indian-express-tamil/media/media_files/2024/10/19/DYDV0CaLC8Kx2qV9af5T.jpg)
பச்சை பயறு வடை என்பது மாலை நேர ஸ்நாக்ஸுக்கும், திடீர் விருந்தாளிகளுக்கும் ஏற்ற ஒரு அற்புதமான சிற்றுண்டி. வெளியே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த வடையை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். பச்சைபயறு பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட இந்த மாதிரி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு
கல் உப்பு
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
கறிவேப்பிலை
சோம்பு
சீரகம்
கொத்தமல்லி இலைகள்
வறுப்பதற்கு எண்ணெய்
செய்முறை:
முதலில், பச்சை பயறை சுத்தமாக கழுவி, ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இது பயறு மென்மையாகவும், அரைப்பதற்கு எளிதாகவும் உதவும். நன்கு ஊறிய பயறில் பாதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றவும். தண்ணீர் சேர்க்காமல் அரைப்பதால் தான் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
மீதமுள்ள பயறுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து, மீண்டும் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இப்போது, முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளாக அரைத்து வைத்திருக்கும் மாவுகளை ஒன்றாகக் கலக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து, மாவை நன்றாகப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய விடவும். பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, வாழை இலை அல்லது உங்கள் கைகளிலேயே தட்டி வடை வடிவம் கொடுக்கவும். தட்டிய வடைகளை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக மாறும் வரை இருபுறமும் நன்கு வறுக்கவும். அவ்வளவுதான்! இப்போது சுவையான, மொறுமொறுப்பான பச்சை பயறு வடை தயார். இந்த வடை தனியாகவே மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், இதற்கு சட்னி போன்ற தொட்டுக்கொள்ளும் உணவு தேவையில்லை. சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.