உதிரி உதிரியாக மசாலா கடலை... மாவு சேர்க்கும் போது இத மறக்காதீங்க; தரமான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி

உதிரி உதிரியாகவும், மசாலா நிறைந்ததாகவும் கடலை எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த சம்மருக்கு கடலை செய்து கொடுங்கள் சூப்பராகவும் சாப்பிடுவார்கள்.

உதிரி உதிரியாகவும், மசாலா நிறைந்ததாகவும் கடலை எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த சம்மருக்கு கடலை செய்து கொடுங்கள் சூப்பராகவும் சாப்பிடுவார்கள்.

author-image
WebDesk
New Update
groundant masala

கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். 

Advertisment

அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.

மசாலா கடலை அல்லது கடலை பக்கோடா என்று கூறப்படும் வேர்கடலை வைத்து செய்யப்படும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் எப்படி ஈசியாக செய்வது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பது பற்றி பார்ப்போம். மிகவும் ஹெல்தியாக இதை வீட்டிலேயே செய்துவிடலாம். 

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

நிலக்கடலை பருப்பு – 400 கிராம்
கடலை மாவு – 1 கப் (150 கிராம்)
அரிசி மாவு – ½ கப்
உப்பு – ½ டீஸ்பூன்
சோம்பு பொடி – ½ டீஸ்பூன்
மிளகு தூள் – ¼ டீஸ்பூன்
சீரகப் பொடி – ¾ டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – ¼ டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு – 25 கிராம்
இஞ்சி – 25 கிராம் 

செய்முறை

இதற்கு நிலக்கடலையை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சோம்புத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். 

பின்னர் பூண்டு இஞ்சி அரைத்து தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் இதை கலப்பதற்காக இந்த பூண்டு தண்ணீர் சிறிது சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள மாவை சிறிது தூவி விட்டு கடலையை போட்டு மேலே மீண்டும் இஞ்சி பூண்டு தண்ணீர் சேர்த்து மாவு தூவி நன்கு பிரட்டவும். இதே போல சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவு போட்டு போட்டு பிரட்டி எடுக்க வேண்டும். 

பின்னர் இவற்றை சிறிது நேரம் வைத்துவிட்டு எண்ணையை காய விடவும். தண்ணீர் இல்லாமல் கடலை காய்ந்ததும் இதை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.சிவந்து வரும் வரை பொறித்து எடுத்தால் அவ்வளவுதான் சுவையான மசாலா கடலை ரெடி ஆகிவிடும்.

Healthy light weight snacks to eat in this season

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: