/indian-express-tamil/media/media_files/2025/08/21/masala-poori-2025-08-21-14-58-10.jpg)
தெருவோர உணவுகளில் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு மசாலா பூரி. இந்த சுவையான உணவை இப்போது வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். தெருவோர மசாலா பூரிக்கு ஈடான சுவையை தரும். இந்த எளிமையான செய்முறையை எப்படி செய்வது என்று சவுத் இந்தியன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - முக்கால் டம்ளர்
மிளகு - ஒரு ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - நான்கு
ஓமம் - ஒரு ஸ்பூன்
சாப்பாடு அரிசி - இரண்டு ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 10 டம்ளர்
வேகவைத்த உருளைக்கிழங்கு
வேகவைத்த சுண்டல் மற்றும் பட்டாணி
பூரி - ஐந்து
நறுக்கிய வெங்காயம்
மசித்த உருளைக்கிழங்கு
பூந்தி
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் முக்கால் டம்ளர் துவரம்பருப்பு, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் ஓமம் மற்றும் இரண்டு ஸ்பூன் சாப்பாடு அரிசி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். அடுத்து, ஒரு கடாயில் 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு ஸ்பூன் கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.
பின்னர், அடுப்பை ஆன் செய்து, ஒரு கொதி வந்ததும் வேகவைத்த உருளைக்கிழங்கு, சுண்டல், பட்டாணி மற்றும் மசித்த சுண்டலை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு கிண்ணத்தில், ஐந்து பூரிகளை உடைத்து போடவும்.
அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் மசித்த உருளைக்கிழங்கைத் தூவ வேண்டும். பிறகு, பட்டாணி மற்றும் சுண்டலுடன் கலந்து வைத்த மசாலாவை ஊற்றி, பொரித்த கடலை சேர்த்து கலக்கி சாப்பிடலாம். இந்த செய்முறையைப் பின்பற்றினால், வீட்டிலேயே சுவையான மசாலா பூரியை சுவைத்து மகிழலாம். இனி பிள்ளைகளுக்கு கடைகளில் வாங்கிக் கொடுக்காமல் வீட்டிலேயே செய்து கொடுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.