முருங்கைக்கீரை சூப் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை (Low-Density Lipoprotein - LDL) மலத்தின் வழியாக வெளியேற்ற உதவுவதோடு, இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பையும் நீக்க உதவுகிறது. டாக்டர் விகடன் யூடியூப் பகத்தில் டாக்டர் தீபா கொடுத்த பேட்டியை வைத்து அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
செய்முறை: ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை எடுத்துக் கொள்ளவும். இந்தக் கீரையைத் தண்ணீரில் இட்டு நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில், தேவையான அளவு மிளகு, சீரகம் மற்றும் பூண்டு சேர்க்கவும். இந்தக் கலவையை சூப் போல அருந்தலாம்.
பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) மற்றும் (தேவைப்பட்டால் சேர்க்கப்படும்) இஞ்சியில் உள்ள கிளிசரோல் ஆகியவை உடலைச் சுத்தம் செய்யும் தன்மை கொண்டவை. இவை இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, உடலில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்ய உதவுகின்றன. எனவே, இந்த முருங்கைக்கீரை சூப்பை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், கெட்ட கொழுப்பைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
மேலும் முருங்கைக்கீரையில் வைட்டமின் A, C, B, E, பீட்டா கரோட்டின், புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இதில் உள்ளன. குறிப்பாக, மனித உடலால் தயாரிக்கப்பட முடியாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இதில் இருப்பது தனிச் சிறப்பு.
Advertisment
Advertisements
வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது, உடல் தொற்றுகளை எதிர்த்துப் போராட வலிமை அளிக்கிறது. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த விருத்திக்கு உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.