மன்னர்கள் விரும்பி சாப்பிட்ட தூய மல்லி அரிசி; இம்யூனிட்டிக்கு பெஸ்ட்: அனிதா குப்புசாமி

தூயமல்லி அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. பாரம்பரிய அரிசி வகைகளில் இதில் தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது என்று அவர் கூறினார்.

தூயமல்லி அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. பாரம்பரிய அரிசி வகைகளில் இதில் தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது என்று அவர் கூறினார்.

author-image
WebDesk
New Update
Thuyamalli

பாரம்பரிய அரிசியான தூயமல்லி அரிசியில் உள்ள நன்மைகள் பற்றி அனிதா குப்புசாமி தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், தூயமல்லி அரிசியில் அத்தனை நன்மைகள் உள்ளது. ஒரு அரிசி என்றால் அது சுவை, உபரி, நிறைய பதார்த்தங்கள் செய்யக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது அத்தனையும் இந்த அரிசியில் உள்ளது. இந்த அரிசி பார்க்க தட்டமாகவும், சீக்கிரத்தில் வேகக் கூடியதாகவும் இருக்கும். வெள்ளை, மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். 

Advertisment

இந்த அரிசியை மன்னர்கள் விரும்பி சாப்பிட்டுள்ளார்கள். இந்த நெய் வகையை பாதுகாத்து வந்துள்ளனர்.  தூய மல்லி அரிசியை பயிரிடும் விவசாயிகளை உற்சாகப்படுத்த அந்த காலத்தில் மன்னர்கள் பரிசு கொடுத்துள்ளனர். இது சுவை மட்டுமல்லாமல் ஏராளமான நன்மைகள் உள்ளது.

தூயமல்லி அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. ஆரோக்கியத்தை பெருக்கி கொள்ள நல்ல சத்தான பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும். தூய மல்லி அரிசியில் சோறு மட்டுமல்லால் பலகாரங்களும் செய்து சாப்பிட முடியும். தூய மல்லி அரிசியில் செய்யும் கஞ்சி இளநீர் குடிப்பது போல் அவ்வளவு ருசியாக இருக்கும் என்று அவர் கூறினார். 

Advertisment
Advertisements

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: