குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் ஃபலூடா எப்படி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ஃபலூடா வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பால் – 1 கப்
பிரெட் -3
சர்க்கரை – 1/2 கப்
எசன்ஸ் -1 தேக்கரண்டி
ஃபலூடா செய்வதற்கு
வேகவைத்த சேமியா- 1 கப்
ஜெல்லி – 1 கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
செர்ரி பழம் – 3
முந்திரி, காய்ந்த திராட்சை – சிறிதளவு
செய்முறை
முதலில் பாலை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சிய பாலில் பிரெட் துண்டுகளை போடவும். பிரெட் துண்டுகளின்
ஓரங்கள் வெட்டி சேர்க்கவும். பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்.
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும். ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் சேமியா போடவும். பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். அதன் மேல் முந்திரி, காய்ந்த திராட்சை போடவும். கடைசியாக அதில் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து அலங்கரிக்கவும். அவ்வளவு தான் ப்ரிஜில் வைத்து எடுத்தால், ஜில் ஜில் ஃபலூடா ஐஸ்கிரீம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“