ஆரோக்கியமான வாழ்வுக்கு காய்கறிகளின் பங்கு அதிகமாக இருக்கிறது. நாம் தினமும் எடுத்துகொள்ளும் சாப்பாட்டில் பாதி அளவு காய்கறிகள் இடம்பெறுவது அவசியம். இந்நிலையில் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் பலன் அதிகம் என்று கூறப்பட்டாலும், சில காய்கறிகள் சமைத்தால் அதன் பயன் அதிகரிக்கிறது. இந்நிலையில் அப்படிபட்ட 5 காய்கறிகள் எவை என்பதை தெரிந்துகொள்வோம்.
தண்ணீர் முட்டான்
இதை சமைக்கும்போது, இதில் உள்ள சத்துக்கள் வெளியாகி நமது உடல் எளிதாக எடுத்துகொள்ளும் வகையில் மாறுகிறது. இதை சமைக்கும்போது வைட்டமின் ஏ, பி9, சி மற்றும் இ வெளியாகிறது.
காளான்/ மஷ்ரூம்
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் சமைக்கும்போது வெளிப்படுவதால், வயதாவதை தடுத்து இளமையாக இருக்க உதவுகிறது.
தக்காளி
தக்காளியில் உள்ள லைக்கோபென்னே ( lycopene)என்ற சத்து இதய கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது. தக்காளியை சமைப்பதால் வைட்டமின் சி சத்து அளவு குறைத்தாலும் லைக்கோபென்னே சத்து வெளிப்படும் அளவு அதிகரிக்கிறது.
கேரட்
இதில் சமைக்குபோது வைட்டமின் ஏ வெளிப்படுவதால், நமது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பார்வை திறன் மேம்படுகிறது. கேரட்டை தோலுடன் சமைப்பதால் அதில் இருக்கும் சத்து அதிகமாக நமக்கு கிடைக்கும்.
பீன்ஸ்
இதில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால், இதை பொரிக்கும்போதும், மைக்ரோ அவனில் வைத்து பேக் செய்யும்போதும், இதன் சத்து அதிகரிக்கிறது.