Advertisment

தேன், எலுமிச்சை நீர் : என்ன நடந்தாலும் இதை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க

இதுபோல டீ மற்றும் காப்பியை நாம் வெறும் வயிற்றில் குடித்தால், நமது வயிற்றில் இருக்கும் ஆசிடை பாதிக்கும். இதனால் ஜீரணிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும்.

author-image
WebDesk
New Update
என்ன நடந்தாலும் இதை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க

என்ன நடந்தாலும் இதை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க

இந்நிலையில் காலை உணவு மிகவும் முக்கியம். இரவில், 9 மணி நேரத்திற்கும் மேலாக நாம் எதுவும் சாப்பிடாமல் இருப்பதால் காலை உணவை நாம் தவிர்க்க கூடாது.  . இந்நிலையில் இதுபோல காலை வெறும் வயிற்றில் சில உணவுகளை நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Advertisment

இந்நிலையில் நாம் காலையில் எலுமிச்சை தண்ணீர், தேன் கலந்து நாம் குடிப்போம். இந்நிலையில் இது நமது கொழுப்பை கரைக்கும் என்று நினைப்போம். ஆனால் அப்படி செய்வதில்லை. தேனில் அதிக கலோரிகள் இருக்கிறது. இந்நிலையில் சுத்தமான இயற்கையான தேன் கிடைக்கும் சாத்தியம் குறைவு.

 இதனால் நாம் தேன் கலந்த, எலுமிச்சை தண்ணீர் குடித்தால், ரத்த சர்க்கரைதான் அதிகமாகும். காலையில் நமது ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், நாள் முழுவதும் அதிக பசி எடுக்கும்.

இதுபோல டீ மற்றும் காப்பியை நாம் வெறும் வயிற்றில் குடித்தால்,  நமது வயிற்றில் இருக்கும் ஆசிடை பாதிக்கும். இதனால் ஜீரணிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும்.

இந்நிலையில் காலையில் காப்பி, டீ உள்பட மற்ற கப்பைன் உள்ள பானங்களை குடிக்கும்போது, கார்டிசோல் ( cortisol) அளவு அதிகரிக்கும். இந்த கார்டிசோல்தான் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.  இதனால் கூடுதல் மன அழுத்தம் ஏற்படும்.

இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் காலையில், அதிக புரத சத்து மற்றும் கொழுப்பு சத்து கொஞ்சம் உள்ள உணவுகளை சாப்பிட்ட வேண்டும். அப்போதுதான் நாள் முழுவதும் கூடுதல் பசி எடுக்காது.

சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் மற்றும் இன்சுலின் நன்றாக செயல்படும் ஆரோக்கியமான நபர்கள் தேன் அல்லது பழங்களை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.   

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment