தினை வகைகளில் முக்கியமானது, குதிரைவாலி. இந்த 2023ம் ஆண்டு தினை ஆண்டாக பின்பற்றவும் என்று மத்திய அரசு கூறியது.இந்நிலையில் குதிரைவாலி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை நாம் தெரிந்துகொள்வோம்.
இந்த குதிரைவாலி, இதய ஆரோக்கியம், சருமம், கூந்தல் வளர்ச்சி ஆகியவற்று உதவுகிறது. நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டுக்கு உதவுகிறது. எலும்புகள் மற்றும் தசைகளில் ஆரோக்கியத்திற்கு துணையாக நிற்கிறது. கூந்தல் உதிர்தல் இருந்தால், நீங்கள் இதை கண்டிப்பாக சப்பிட வேண்டும்.
மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இந்நிலையில் குதிரவாலியை வைத்து தோசை, பான்கேக், குக்கீஸ் செய்து சாப்பிடலாம். இது போல குதிரைவாலி உப்புமா, பொங்கல், கஞ்சியும் சேர்ந்து சாப்பிடலாம்.
இதில் புரோட்டீன் உள்ளது. மேலும் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் இது க்ளூட்டன் ஃப்ரீ உணவு. நரம்புகள் மற்றும் தசைகளுக்கு மத்தியில் இருக்கும் செயல்பாட்டை இது உருவாக்குகிறது. குதிரைவாலியை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடை குறைக்கிறது.
ஆய்வாளர்கள் கூறுகையில், குதிரைவாலி, குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்டது. இதனால் நீங்கள் குதிரைவாலி சாப்பிட்டால் உங்கள் ரத்த குளுக்கோஸ் உடனடியாக அதிகரிக்காது. இன்சுலினை உடல் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதிருந்து இது நம்மை பாதுகாக்குகிறது.