நம் உடல் எடை இயல்பை விட கொஞ்சம் அதிகமாக இருக்கிறதா அல்லது மருத்துவ சோதனைகளில் ரத்த கொழுப்பு அளவு கூடுதலாக உள்ளதா இதோ மருத்துவர் சிவராமன் கூறும் வழிமுறையை பின்பற்றினாலே போதும் இவற்றை கட்டுப்படுத்தலாம்.
நம் அன்றாடம் உணவில் சின்ன வெள்ளை பூண்டு நிறைய சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தாலே உடலில் வரக்கூடிய பல நோய்களை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இன்றைய சூழலில் வெள்ளைப்பூண்டினுடைய சாறை எடுத்து மாத்திரைகள் தயார் செய்யப்படுகிறது. மாத்திரைகளை காட்டிலும் உணவில் தொடர்ந்து எடுத்து வந்தாலேகொழுப்பு, ரத்த கொதிப்பு இரண்டையும் கட்டுப்படுத்தலாம் என்கிறார் மருத்துவர்.
பூண்டு ஜீரணத்தை சரிப்படுத்தக் கூடியது.நிறைய அசைவ உணவு சாப்பிட்டிருந்தாலோ எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட்டு இருந்தாலோ அதனுடைய கொழுப்பு நம் உடலில் அதிகம் சேராமல் அஜீரணம் உண்டாகாமல் நம்மை காக்க வெள்ளைப்பூண்டு கட்டாயம் உணவில் இருக்கவேண்டும்.
உணவு தாளிசத்துக்காக பயன்படுத்தப்பட்ட ஏழு பொருள்களில் ஒன்று வெள்ளைப்பூண்டு, எங்கெல்லாம் அசைவம், எண்ணெய் சேர்த்துக் கொள்கிறார்களோ அங்கு எல்லாம் கண்டிப்பா பூண்டு இருக்க வேண்டும். சின்ன குழந்தைகளுக்கு வரக்கூடிய டான்சில் பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகிறது.
டான்சில் வீக்கத்தை அந்த காலத்தில் பூண்டு சாறு எடுத்து அதை தேனில் குழைச்சு சாப்பிட வைப்பாங்க. அதுவும் அந்த சாறு சாதாரணமாக கிடைக்காது. பூண்டை நல்லா அரைச்சு ஒரு பேஸ்ட் மாதிரி ஆக்கி ஒரு வெள்ளை துணியில் தடவி அந்த துணியை லேசா சூடாக்கி துணியை பிளிந்தால் மட்டும்தான் சாறு கிடைக்கும்.
அந்த மாதிரி ஒரு ஒரு ஸ்பூன் சாறு எடுத்து ஒரு ஸ்பூன் தேனில் கலந்து ஒரு பத்து நாட்களுக்கு தொடர்ந்து குழந்தையின் உள்நாக்கில் தடவி விடுவாங்க அப்போ அந்த டான்சில் வீக்கம் குறையும். இல்லையென்றாள் அந்த பூண்டுத்தேனை சாறை குழந்தைக்கு மெதுவா எச்சிலோட முழுங்க கற்றுக் கொடுத்துக்கிட்டாலே போதும் டான்சில் வீக்கம் குறையும்.
வெங்காயம் வந்து கருத்தரிப்பிற்கு உதவியாக இருப்பது போலவே வெள்ளை பூண்டும் பெண்களுக்கு கரு முட்டை உருவாவதற்கும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி குறைவதற்கும் மாதவிடாயை சீராக்கவும் உதவுகிறது.
மாதவிடாய் துவங்கிய பத்தாவது நாளில் இருந்து தினசரி பூண்டு சேர்த்துக் கொண்டே வருவதன் மூலம் சினைப்பையில் இருந்து முட்டை நல்லா உள்ள வர்றதுக்கும் கருப்பை கருவை சுமப்பதற்கு ஒரு ஏதுவான நிலை வருவதற்கும் உதவும்.
சித்த மருந்து, ஆயுர்வேத மருந்துகளில் கருத்தரிப்பிற்கு பயன்படக்கூடிய தைலங்கள் , மருந்துகள் செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதனால் வெங்காயமும் வெள்ளை பூண்டும் தினசரி உணவில் ஏதாவது சின்ன அளவுல சேர்த்துக் கொண்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். அசைவ உணவு சாப்பிடும்போது மட்டும் இல்லாமல் சைவ உணவு சாப்பிடும்போதும் பூண்டை வந்து அதிகமாக சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.
பூண்டை வேக வைக்காமல் சாப்பிட்டால் அதன் கந்தக தன்மையால் தொண்டை புண் ஆக வாய்ப்பு உள்ளது. எனவே வேகவைத்து காய்கறிகளுடன் சேர்த்துக் கொள்வது சிறப்பானதாக இருக்கும். ஆறு பல் பூண்டு தினசரி கட்டாயம் அதுவும் குறிப்பாக சின்ன பூண்டு சாப்பிடலாம்.
இதனால் உடல் எடை குறையும், ரத்த கொழுப்புக் கூடாது, ரத்த கொதிப்பு குறையும், உடம்புக்குள் கிருமிகள் வளராமல் தடுக்கும், மாதவிடாய் சீராக வைத்துக் கொள்ளும், ஆண்மை தன்மை கூடும் இப்படி பல பயன்கள் இந்த வெள்ளை பூண்டு சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“