வெங்காயம், தக்காளி இல்லையா? இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த சட்னி; இப்படி டக்குன்னு செய்யுங்க!

வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டும் இல்லாமல் கும்பகோணம் ஸ்டைலில் பூண்டு கார சட்னி எவ்வாறு தயாரிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டும் இல்லாமல் கும்பகோணம் ஸ்டைலில் பூண்டு கார சட்னி எவ்வாறு தயாரிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Garlic chutney

தோசை மற்றும் இட்லிக்கு எத்தனையோ சட்னி காம்பினேஷன் சாப்பிட்டிருப்போம். ஆனால், வெங்காயம் மற்றும் தக்காளி எதுவும் இல்லாமல் காரசாரமான பூண்டு கார சட்னி எவ்வாறு செய்யலாம் என்று இதில் பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்,
உளுத்தம் பருப்பு,
காய்ந்த மிளகாய்,
புளி,
பூண்டு, 
இஞ்சி, 
கறிவேப்பிலை, 
பெருங்காயத்தூள்,
உப்பு மற்றும் 
தண்ணீர் 

செய்முறை:

Advertisment
Advertisements

அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இத்துடன் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவை சேர்த்து 30 விநாடிகளுக்கு வதக்க வேண்டும். இதையடுத்து, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து 7 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.

இதன் பின்னர், வறுத்து வைத்திருக்கும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது, தாளிப்பதற்காக அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

இத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் அரைத்து வைத்த கலவையை சேர்க்க வேண்டும். இதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான பூண்டு கார சட்னி தயாராக இருக்கும்.

Chutney

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: