சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
இப்படியாக இட்லி தோசைக்கு சுவையான சத்தான வாயுத்தொல்லையை போக்கும் பூண்டு சட்னி எப்படி செய்வது என்று இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
இட்லி தோசை சப்பாத்தி என எல்லாவற்றிற்கும் உகந்த ஒரு சுவையான பூண்டு சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
எண்ணெய் பூண்டு வெங்காயம் வர மிளகாய் புளி உப்பு கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும். பின்னர் அதனுடன் வர மிளகாய் சேர்த்து வதக்கி அனைத்தையும் ஆரம்பித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
இதை ஒரு முறை அரைத்து அதில் புளி, உப்பு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள சட்னியையும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிட்டு இட்லி தோசைக்கு பரிமாறினால் சுவையாக இருக்கும்.