பிரியாணியே தோற்று போகும்… சிக்கனை ஊறவைத்து நெய் சோறு இப்படி செய்து பாருங்க!
சுவையான நெய் சோறு மற்றும் சிக்கன் கிரேவி எப்படி தயாரிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது பிரியாணியை விட சுவையாக இருப்பதால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவையான நெய் சோறு மற்றும் சிக்கன் கிரேவி எப்படி தயாரிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது பிரியாணியை விட சுவையாக இருப்பதால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக பிரியாணி இருக்கும். ஆனால், அதை விட சுவையான நெய் சோறு மற்றும் சிக்கன் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்று தற்போது பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
சிக்கன், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், புதினா, மல்லி இலைகள், தயிர், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, தக்காளி, வெங்காயம், உப்பு, எண்ணெய், நெய், ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை மற்றும் சீரகம்.
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கிலோ சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒன்றரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, இரண்டு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா, மல்லி இலைகள், மூன்று ஸ்பூன் தயிர், ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மல்லித் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, நறுக்கிய தக்காளி இரண்டு, சிறிதளவு வறுத்த வெங்காயம், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த மசாலா கலவையை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். இதனிடையே, அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய், இரண்டு ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஒரு அன்னாசிப்பூ மற்றும் ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக ஒரு வெங்காயத்தை நறுக்கி போட்டு இத்துடன் வதக்க வேண்டும்.
இந்த வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். இதையடுத்து, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு புதினா இலைகள் சேர்த்து ஒரு படி தண்ணீர் ஊற்ற வேண்டும். இறுதியாக, ஊற வைத்த பாஸ்மதி அரிசியும், தேவையான அளவு உப்பும் சேர்க்க வேண்டும். இது நன்றாக கொதித்ததும் ஒரு விசில் விட்டு ஆஃப் செய்து விடலாம்.
இனி, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அத்துடன் சிறிதளவு சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும். அதன் பின்னர், ஊற வைத்த சிக்கனை இதில் போட்டு 5 நிமிடங்களுக்கு மூடி விட வேண்டும். இதன் பின்னர், சிக்கனை 10 நிமிடங்கள் கிளறி விட்டு அடுப்பை ஆஃப் செய்யலாம்.
இவ்வாறு செய்தால் சுவையான ஹைதராபாத் சிக்கன் கிரேவியும், நெய் சோறும் தயாராகி விடும்.