தினமும் காலையில் 10 மி.லி இஞ்சி சாறு, 5 மி.லி தேன்; இவ்ளோ நன்மை இருக்கு: மருத்துவர் சிவராமன்
"காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய். இஞ்சி சாறை தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். தேன் இஞ்சியின் துணை மருந்தாக இருக்கிறது" என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
"காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய். இஞ்சி சாறை தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். தேன் இஞ்சியின் துணை மருந்தாக இருக்கிறது" என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
"உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இஞ்சி மற்றும் தேநீர் கலந்தபானம் சிறந்தது." என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
சித்த மருத்துவர் சிவராமன் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார். நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து மிகவும் தெளிவாகவும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் அவர் கூறி வருகிறார். அந்த வகையில், தினந்தோறும் காலையில் என்ன வகையான பானங்களை அருந்துவது என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
Advertisment
இது குறித்து யூடியூப் வீடியோ ஒன்றில் மருத்துவர் சிவராமன் பேசுகையில், "நெஞ்சு எரிச்சல், சாப்பிட்டவுடன் வயிறு உப்பிக் கொள்ளுதல், அஜீரணம் பிரச்சனை போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பானமாக இஞ்சி சாறு இருக்கிறது. 10 மி.லி இஞ்சி சாறு, 5 மி.லி தேன், 200 மி.லி வெந்நீர் கலந்த பானத்தை பருகி வரலாம்.
சித்த மருத்துவத்தில் ஒரு பாடல் உண்டு. 'காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய்' என்பதாகும். இஞ்சி சாறை தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். தேன் இஞ்சியின் துணை மருந்தாக இருக்கிறது. மதிய வேளையில் சுக்குடன் ஒரு துளி நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
மூலிகைகளில் தலைமை மூலிகை கடுக்காய் தான். 'கடுக்காயும் தாயும் கருதிலொன்றென்றாலும் கடுக்காயைத் தாய்க்கதிகங் காண்நீ' என்று பாடல் உண்டு. தாயை விட சிறந்தது கடுக்காய் என்கிறார்கள். தாய் என்பவள் 6 சுவையுடைய உணவை குழந்தைக்கு கொடுத்து கொடுத்து குழந்தையின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துக் கூடும். ஆனால், அந்த 6 சுவையை கொடுத்து கொடுத்து நோயை போக்குவது கடுக்காய் என்று ஒரு ஆசிரியர் அந்தப் பாடலுக்கு விளக்கம் எழுதியுள்ளார். கடுக்காயில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய 6 சுவையும் உள்ளது. அவற்றை இரவு நேரத்தில் சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இஞ்சி மற்றும் தேநீர் கலந்தபானம் சிறந்தது. சீனாவில் பயன்படுத்தக்கூடிய பானமாக இருக்கும் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, எலுமிச்சை பழம் ஆகிய மூன்றும் சேர்ந்த சாறு, அவற்றுடன் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேன், இந்த ஐந்தும் சேர்ந்த கலவையை காலையில் சாப்பிட்டு வந்தால், அவை உடலில் இருக்கும் பித்தத்தை சமன் செய்கிறது. உடல் எடையை குறைக்கிறது.
சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு, ஆவாரை தேநீர் சாப்பிட்டு வரலாம். ஆவாரை உடலில் உள்ள எல்லா நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது. 'ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..' என்ற மருத்துவப் பழமொழி உண்டு.
சர்க்கரை நோய்க்கு மற்றொரு பாடலும் உண்டு, ‘ஆவாரை கொன்றை நாவல் அலைகடல் முத்தங் கோஷ்டம் மேவிய மருதத்தோலும் மிளிர்ந்திட ரொக்கக் கொண்டு, பூவிரி குழலினாளே! காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும் தானே’. இதற்கு என்ன அர்த்தம் என்றால், காவிரி நீர் இனிப்பாக இருக்கும். கடல் நீர் உப்பாக இருக்கும். சிறுநீர் இனிப்பாக போனால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என பொருள்படும். சிறுநீரில் புரதம் கலந்து போனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருக்கிறது என அர்த்தம். இவை இரண்டிற்குமே ஆவாரை குடிநீர் மிகவும் சிறந்தது." என்று அவர் கூறுகிறார்.