நெல்லிக்காய், தக்காளி சேர்த்து சுவையான சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொட்டை நீக்கிய நெல்லிக்காய் – அரை கப்
தக்காளி – 1
இஞ்சி துருவல் – 1
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
செய்முறை
நெல்லிக்காய், தக்காளி, இஞ்சி துருவல் எடுத்துக் கொள்ளவும். இதை சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து இந்த அரைத்த விழுதினை சேர்த்து கொதிக்க விடவும். பின்பு மிளகு, சீரகத்தூள், கொத்தமல்லி சேர்த்து மிதமான சூட்டில் பரிமாறவும். அவ்வளவு தான் சிம்பிள் சூப் ரெசிபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“