/tamil-ie/media/media_files/uploads/2022/05/amla-1-unsplash.jpg)
நெல்லிக்காயை தேனில் கலந்து சாப்பிடுவதால் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.
நெல்லிக்காய் ஒரு ஆப்பிளுக்கு சமம் என்பது மட்டுமல்ல, ஒரு நெல்லிக்காய் ஒரு சொட்டு ரத்தத்திற்கு உத்ரவாதம் தரும் என்பது உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கும். இந்த அற்புத சத்துக்களைக் கொண்ட நெல்லிக்காயை, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்திகரிப்பு ஆவதோடு, இரத்தணுக்களின் அளவும் அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
கண் பிரச்னை கொண்டவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம். கர்ப்பப்பை பாதிப்புகள் நீங்கி சீரான மாதவிலக்கு உண்டாகும்.
சுருக்கங்கள் மறைந்து முகத்தின் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும். மேலும், முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us