இளமையிலேயே முடி நரைக்கிறதா? பிரச்சனை இதுதான்… எலுமிச்சை சாறில் இதை சேர்த்து குடிங்க; டாக்டர் நித்யா

இளம் வயதிலேயே தலை முடி நரைப்பதற்கான காரணத்தை மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் சரி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளம் வயதிலேயே தலை முடி நரைப்பதற்கான காரணத்தை மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் சரி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
home remedy for grey hair

தற்போதைய காலகட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு நரை முடி இருக்கிறது. இவ்வாறு இளநரை உருவாவதற்கான காரணம் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

உணவு முறை மாற்றம் காரணமாக இளநரை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இளம் வயதில் தலை முடி நரைக்கத் தொடங்குகிறது. 

அவ்வாறு இளநரை ஏற்படும் போது ஷாம்பூ, சீரம் போன்ற பொருட்களை வாங்கி பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், உணவு முறையை மாற்றி அமைக்கும் போது தான், இதனை சரியான முறையில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.

மேலும், தலையில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதன் மூலம் இளநரை ஏற்படுவதை தடுக்க முடியும். இதற்காக வாரத்திற்கு மூன்று முறையாது எண்ணெய் தேய்த்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.

Advertisment
Advertisements

கால்சியம், மெக்னீஷியம் மற்றும் சின்க் ஆகிய சத்துகள் அடங்கிய உணவுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். சத்து மாவுக் கஞ்சி, முளைகட்டிய பயிறு வகைகள் போன்ற முழு தானிய வகைகளை சாப்பிடலாம்.

உடலில் பித்தம் அதிகரித்து உஷ்ணம் உயரும் போது தலை முடி நரைக்கத் தொடங்கும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். காரமான அசைவ உணவுகள் சாப்பிடுவது, சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது மற்றும் இரவில் சீராக உறங்காமல் இருப்பது போன்றவை உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

எனவே, இது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். மேலும், எலுமிச்சையில் ஒரு பானம் தயாரித்து பருகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில், எலுமிச்சையை தோலுடன் சேர்த்து நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதனை இரண்டு லிட்டர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் சுமார் 20 நிமிடங்கள் கொதித்ததும், அதனை வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை குடிக்கும் போது உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தம் குறையும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

நன்றி - Dr.Nithya's Varam Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Grey Hair

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: