அஜீரணம் என்பது நம்மில் பலரும் தினமும் சந்திக்கும் சிக்கலாக இருக்கிறது. நமது வாழ்க்கை முறையில் அதீத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக பண்டிகை காலங்களில் எண்ணெய்யில் பொறித்த உணவுகள். அதிக சர்க்கரை உள்ள பலகாரம், கேக் இப்படி சாப்பிடுவோம். வயிறு முழுவதும் சாப்பிட்டு, அஜீரணத்தோடு போராடுவோம்.
இந்நிலையில் இதற்கு நல்ல தீர்வாக இந்த பானம் இருக்கும். மிகவும் எளிமையாக செய்யமுடியும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி துருவியது, 1 ஸ்பூன் லெமன் ஜூஸ், தேன், பட்டை பொடி ( இலவங்கபட்டை ) ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
செய்முறை
தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். தொடர்து இஞ்சி துருவியதை சேர்க்கவும். தொடர்து நன்றாக கொதித்ததும். அதை வடிகட்டிய எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும். மிதமான வெப்பத்தில் குடிக்கவும்.