இட்லி மாவு மட்டும் வைத்து நாம் ஈசியாக அல்வா செய்ய முடியும். இந்நிலையில் இந்த ரெசிபியை தவறாமல் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு
ஏலக்காய் பொடி
முந்திரி
நெய்
சர்க்கரை
செய்முறை: இட்லி மாவை தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். ஒரு கடாய் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் 4 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளுங்கள். தொடர்ந்து அந்த நெய்யில் முந்திரியை சேர்க்க வேண்டும். அதை வறுத்து எடுத்துகொள்ளுங்கள். அந்த முந்திரியை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தண்ணீர் சேர்த்த இட்லி மாவை இந்த கடாயில் சேர்த்து, 5 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் கலந்துகொண்டே இருக்க வேண்டும். தற்போது மாவு கட்டியாகிவிடும். அதில் அரை கப் அளவு சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை கரையும் அளவிற்கு மாவை நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இதில் நெய் சேர்க்க வேண்டும். அதில் முந்திரியை சேர்க்கவும்,. கால் டீஸ் பூன் அளவிற்கு ஏலக்காய் பொடியை சேர்க்கவும். இதை நன்றாக கலக்க வேண்டும். தற்போது அல்வா சூப்பராக ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“