/indian-express-tamil/media/media_files/2025/05/28/DRsVJMy1Z6lxLZMRvjzv.jpg)
இயற்கையாக கிடைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவற்றின் தன்மை அறிந்து எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை சரியான முறையில் மேம்படுத்த முடியும்.
அதன்படி, மந்தாரை பூவில் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. மந்தாரை பூக்களின் சாறு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மந்தாரை பூக்கள் மற்றும் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் பசை, சரும அழற்சி, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது
மந்தாரை பூக்கள் மற்றும் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. மந்தாரை பட்டையில் உள்ள சத்துக்கள் காயங்களை விரைவில் குணப்படுத்த உதவுகின்றன.
மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். அத்தகைய நேரத்தில் வீட்டிலேயே மந்தாரை பூ கொண்டு ஒரு பானம் தயாரித்து குடிப்பதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதற்காக 5 மந்தாரை பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். குறிப்பாக, சுமார் 20 நிமிடங்கள் இதனை கொதிக்க விட வேண்டும்.
அதன் பின்னர், இதனை வடிகட்டி குடிக்கலாம். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இதனை குடிக்கலாம். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஆற்றல் இந்த மந்தாரை பூக்களுக்கு இருக்கிறது. அதன்படி, தினசரி காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் இதை குடிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.