/indian-express-tamil/media/media_files/2025/08/27/beetroot-halwa-2025-08-27-19-43-22.jpg)
பீட்ரூட் அல்வா என்பது சுவையான இனிப்பு மட்டுமல்ல, உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய ஒரு மருந்தாகவும் இருக்கிறது. இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பீட்ரூட்டை, வெல்லம், பால், முந்திரி, பாதாம் போன்ற ஆரோக்கியமான பொருட்களுடன் சேர்த்துச் செய்யும்போது அதன் நன்மைகள் மேலும் அதிகரிக்கின்றன. குறிப்பாக, ரத்தசோகை உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான உணவாக அமையும். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
துருவிய பீட்ரூட் -ஒரு கப்
காய்ச்சி ஆறிய பால்- இரண்டு கப்
வெல்லத் துருவல் -அரை கப்
முந்திரி, பாதாம் ப்ளேக்ஸ் -இரண்டு டேபிள் ஸ்பூன்
நெய் -3 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி -அரை டீஸ்பூன்
செய்முறை:
குக்கரில் துருவிய பீட்ரூட் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். பின்னர் இவற்றை நன்றாக ஆறவிட்டு அதனுடன் வெல்லத் துருவல் மற்றும் ஏலத்தூள், ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கலந்து கலவையில் நன்கு நீர் வற்றி கெட்டியாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இதை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சூடாகவும் பரிமாறலாம். குளிர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து சாப்பிட்டாலும் நல்லது. ரத்த விருத்தியை உண்டு பண்ணும். ஹீமோகுளோபினை கூட்டும்.
முகம் வெளிறி ரத்த சோகையாக இருப்பவர்களுக்கு இதுபோல் செய்து கொடுக்கலாம். வெல்லம் மற்றும் முந்திரி பாதாம் அனைத்தும் சேர்வதால் ருசித்து சாப்பிடுவர். மேலும் ரத்த சோகை, குறிப்பாக இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் இனிப்பாக சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். அதுவும் நிறைவேறும். உணவே மருந்தாவது இப்படித்தான்.
உணவே மருந்து என்ற தத்துவத்திற்கு இந்த பீட்ரூட் அல்வா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சுவையான, ஆரோக்கியமான ஒரு உணவை நாம் எடுத்துக்கொள்ளும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், மனமும் மகிழ்ச்சியடைகிறது. இது போன்ற உணவுகளை நம் அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்வதன் மூலம், பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.