சாதம் ஒண்ணு... பலன் பல; ஒருதடவை இப்படி செய்து பாருங்க!

ஞாபக சக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை வைத்து சுவையான சதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். லஞ்ச் பாக்ஸ்க்கு இது சுவையாக இருக்கும்.

ஞாபக சக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை வைத்து சுவையான சதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். லஞ்ச் பாக்ஸ்க்கு இது சுவையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
vallara sadham

Advertisment

வல்லாரை கீரை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும், வயிற்றுப் புண்களுக்கும் இது மிகவும் நல்லது. இந்த வல்லாரை கீரையை வைத்து எப்படி சுவையான சாதம் எப்படி செய்வது என்று ஃபூடிஸ்ரூப் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வல்லாரைகீரை

Advertisment
Advertisements

பச்சை மிளகாய்

பூண்டு

சின்ன வெங்காயம்

கொத்தமல்லி

புளி

கல் உப்பு

கடலைப்பருப்பு

உளுத்தம் பருப்பு

தனியா

சமையல் எண்ணெய்

கடுகு

வரமிளகாய்

கறிவேப்பிலை

நிலக்கடலை

பொடியாக நறுக்கிய வெங்காயம்

வேகவைத்த சாதம்

செய்முறை:

இந்த சுவையான சாதம் தயாரிக்க சுமார் 15 நிமிடங்கள் ஆகும். முதலில், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா ஆகியவற்றை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில், பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். கீரையின் பெயர் தெரிந்தால், கமெண்ட் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.

கீரை நன்றாக வதங்கி சுருண்டதும், வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி, புளி, கல் உப்பு சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். வதக்கிய கலவையை ஒரு மிக்ஸர் ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இறுதியாக, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, மொறுமொறுப்புக்காக நிலக்கடலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, வேகவைத்த சாதத்துடன் கலந்து பரிமாறினால், சூப்பரான கீரை சாதம் தயார்.

வல்லாரை பொதுவாக நினைவாற்றலை அதிகரிக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் பெயர் பெற்றது. இதில் உள்ள பிரம்மோசைடு, பிராமினோசைடு மற்றும் சென்டெல்லோசைடு போன்ற சேர்மங்கள் மூளையின் நரம்புகளைத் தூண்டி, நினைவாற்றல், கவனம் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்த உதவுகின்றன. வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. வல்லாரைக்கு இயற்கையாகவே மனதை அமைதிப்படுத்தும் மற்றும் பதட்டம், மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது. இது நரம்பு மண்டலத்தை சீராக்கி, மன அமைதியைத் தருகிறது. எனவே இந்த சாதத்தை வாரம் இரண்டு முறையாவது பிள்ளைகளுக்கு செய்து கொடுங்கள்.

vallarai keerai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: