சர்க்கரை நோய் என்பது இன்றைய சூழலில் மிகவும் வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. குறிப்பாக, பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே, ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
Advertisment
அந்த வகையில் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்ட தேநீர் தயாரித்து குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் ஜெய ரூபா தெரிவித்துள்ளார். அதனை தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கம் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுக்கு, மல்லி, வெந்தயம், சீரகம், ஆவாரம்பூ, கருவேப்பிலை, மஞ்சள் மற்றும் நெல்லிவற்றல்
Advertisment
Advertisements
செய்முறை:
குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சமமான அளவில் சேகரித்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் மற்றும் நெல்லிவற்றல் ஆகியவற்றை மட்டும் இரண்டு மடங்காக எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை சுமார் 200 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த நீர் நன்றாக கொதித்ததும் அதனை வடிகட்டி குடிக்கலாம். குறிப்பாக, காலை நேரத்தில் வெறும் வயிற்றிலும், மாலை நேரத்திலும் இந்த தேநீர் பருகுவதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். இது சாதாரண டீ மற்றும் காபிக்கு மாற்றாக அமையும்.
இத்தகைய மூலிகை பொருட்கள் அடங்கிய தேநீரை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது, நம் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்று மருத்துவர் ஜெய ரூபா அறிவுறுத்துகிறார்.
நன்றி - SHREEVARMA Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.