/indian-express-tamil/media/media_files/2025/04/18/uUO2cswBhLBOEvXVbRhr.jpg)
சிலருக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாதது மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் இத்தகைய பிரச்சனை ஏற்படுவதாக மருத்துவர் மாயன் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
நாடாப்புழு, கொக்கிப் புழு போன்றவை குடலில் இருப்பதால் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம் என்று அவர் கூறியுள்ளார். இதற்காக வீட்டு வைத்திய முறையில் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் மாயன் செந்தில் குமார் பரிந்துரைக்கிறார்.
இதற்காக சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தலாம். அதன்படி, கற்றாழையை சீவி, அதில் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை சுமார் 7 முறை நன்றாக கழுவ வேண்டும். இத்துடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பாதிப்பு 5 நாட்களில் சரியாகும் என்று மருத்துவர் மாயன் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமைடையும் என்று அவர் கூறுகிறார். இதனை தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும் போது அனைத்து விதமான பிரச்சனைகளும் முற்றிலும் குணமாகும் என்று கூறப்படுகிறது.
நன்றி - Lifetuner Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.