நீர்ச்சத்து டூ நார்ச்சத்து... கிட்னி கல் பிரச்சனைக்கு செம்ம டயட் பிளான்: சொல்லும் டாக்டர் ஷர்மிகா
மதிய நேரத்தில் காய்கறிகளை அவசியம் சாப்பிட வேண்டும். குறிப்பாக, பாகற்காய், வெண்டைக்காய், கோவக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் மற்றும் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் நம் உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மதிய நேரத்தில் காய்கறிகளை அவசியம் சாப்பிட வேண்டும். குறிப்பாக, பாகற்காய், வெண்டைக்காய், கோவக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் மற்றும் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் நம் உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
சிறுநீரக கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உணவு முறையை மாற்றி அமைப்பதன் மூலம், அப்பிரச்சனையில் இருந்து மீண்டு வர முடியும். அந்த வகையில், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளின் பட்டியலை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
Advertisment
இது குறித்த தகவல்களை டெய்ஸி ஹாஸ்பிடல் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் சிறுநீரக கல் இருப்பவர்கள் காலை உணவாக பழங்களை சாப்பிடலாம் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். குறிப்பாக, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, தர்பூசணி பழம், மஸ்க்மெலான், அன்னாசிப்பழம், ஆப்பிள் போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். மதிய நேரத்தில் காய்கறிகளை அவசியம் சாப்பிட வேண்டும். குறிப்பாக, பாகற்காய், வெண்டைக்காய், கோவக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் மற்றும் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் நம் உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இதன் மூலம் சிறுநீரக கல்லை கரைக்க முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். அதிலும், மதிய நேரத்தில் இந்தக் காய்கறிகளை சுமார் 250 கிராம் அளவிற்காவது எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர சாதத்தை குறைவாக சாப்பிட வேண்டும். இதேபோல், சில ஜூஸ் வகைகளையும் காலை 11 மணியளவில் குடிக்கலாம்.
Advertisment
Advertisements
வாழைத்தண்டு சாறு, சுரைக்காய் சாறு, வெள்ளை பூசணி சாறு போன்றவற்றை அருந்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார். மேலும், ரணகள்ளி இலையையும் சிறுநீரக கல் இருப்பவர்கள் மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
காலை 3:30 மணியில் இருந்து 4:30 மணிக்குள்ளாக ஒரே ஒரு ரணகள்ளி இலையை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனை சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.
இவை அனைத்தையும் பின்பற்றும் போது சிறுநீரக கல் பாதிப்பில் இருந்து குணமடைய முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.