/indian-express-tamil/media/media_files/2025/05/02/IHyffYE0AVc4bGgMxUuX.jpg)
சமீப நாட்களில் ஆசன வாயில் மூலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் வருவதாக மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது இதற்கு வழிவகுக்கும்.
மேலும், நாள்பட்ட சீல் கட்டிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மலச்சிக்கல், ஆசன வாயில் ஏற்பட்ட காயம், உடல் பருமன் போன்றவற்றால் இத்தகைய பிரச்சனைகள் உருவாகிறது என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
இது போன்ற பிரச்சனைகளை ஆரம்பகட்டத்தில் சரி செய்வதற்கு வீட்டு வைத்திய முறையை பின்பற்றலாம் என்று மருத்துவர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார். இதற்காக ஒரு கசாயம் தயாரித்து குடிக்கலாம் என்று கூறும் அவர், அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்காக சில பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், மணத்தக்காளி, கடுக்காய், பெருஞ்சீரகம், செவ்வியம் மற்றும் உலர்ந்த திராட்சை ஆகிய அனைத்தையும் பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இந்த தண்ணீர் சூடானதும் தயாரித்து வைத்த பொடியை 5 கிராம் அளவிற்கு சேர்த்து கலக்க வேண்டும்.
சுமார் 15 நிமிடங்களுக்கு இந்தக் கசாயம் கொதித்ததும் வடிகட்டி எடுக்க வேண்டும். இதனை காலை மற்றும் இரவு நேரத்தில் உணவுக்கு முன்பாக குடிக்க வேண்டும் என்று மருத்துவர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார்.
இதை தொடர்ச்சியாக குடிக்கும் போது ஆசன வாய் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமின்றி மலச்சிக்கல் மற்றும் செரிமான தொல்லைகளும் நீங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - PuthuYugamTV Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.