தேநீர் என்பது பலருக்கு உற்சாகம் அளிக்கும் பானமாக இருக்கிறது. தேநீர் இல்லாமல் அன்றைய தினமே முழுமை பெறாது என பலர் கூற நாம் கேட்டிருக்கிறோம். எனினும், உணவகங்களில் குடிக்கும் தேநீரை விட வீட்டில் தயாரிக்கும் தேநீருக்கு சுவை சற்று குறைவாக உள்ளதாக ஒரு கருத்து இருக்கிறது. அந்த வகையில், உணவகங்களில் கொடுக்கப்படும் தேநீர் போன்று வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று தற்போது பார்க்கலாம்.
முதலில் அடுப்பின் மீது ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் பால் சேர்க்க வேண்டும். அதன் பின்னர், பாலை நன்றாக கொதிக்க விட வேண்டும். சுமார் 2 நிமிடங்களாவது பால் கொதிக்க வேண்டும்.
இதையடுத்து, ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை, ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு டீத்தூள் சேர்க்க வேண்டும். இவற்றை பாலில் சேர்த்த பின்னர் மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இறுதியாக ஒரு மேரி கோல்ட் பிஸ்கட் மட்டும் இத்துடன் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர், பிஸ்கட்டை ஒரு ஸ்பூன் வைத்து வெளியே எடுத்து விடலாம்.
இப்போது, டீயை வடிகட்டி குடித்தால் உணவகங்களில் இருக்கும் சுவை அப்படியே இருக்கும்.